வியாழன், ஜூலை 30, 2015

அஞ்சலி - கலாம் அவர்களுக்கு சலாம்





20 வருடங்களுக்கு முந்தைய எனது பள்ளிக் கல்லூரி 
காலங்களில் மாணவர்களின் மீது நம்பிக்கையும் அக்கறையும் 
கொண்ட தலைவர்கள் யாரும் இருந்ததாக ஞாபகம் இல்லை. 
தங்கள் அரசியல் சுயநலன்களுக்காக மாணவர்களை பயன்படுத்தும் 
தலைவர்களை மட்டுமே கொண்ட நம் நாட்டில் மாணவர்களின் 
கையில் நாட்டின் எதிர்காலம் உள்ளது என்பதை அவர்களுக்கு 
எடுத்து சொல்லி கொடுத்து பிரதிபலனாக அவர்களின் மதிப்பையும் மரியாதையையும் மட்டுமே பெற்றுக்கொண்டு மாணவர்களின் 
நவீன மகாத்மாவாகவே வாழ்ந்து காட்டியுள்ளார். 

இந்த விஞ்ஞானியான மெய்ஞானியைப் பற்றி நான் அதிகம் 
அறியாமல் போனது வருத்தமாக உள்ளது. உண்மையில் 
வெட்கப்படுகிறேன். அவரைப் பற்றி முழுமையாக அறிந்துகொள்ள 
வேண்டும் என்ற ஆவல் அதிகரித்துக் கொண்டே இருக்கின்றது. 

கடந்த 15 வருடங்களாக இணையத்தை பயன்படுத்துகிறேன். 
ஆனால் இணையத்தின் மூலம் இதுபோல எந்த ஒரு மனிதருக்கும் மக்கள் இந்த அளவு மரியாதையும் அன்பும் செலுத்தியதை 
பார்த்ததில்லை. கடந்த மூன்று நாட்களும் ட்விட்டர், ஃ பேஸ்புக், வாட்ஸ் அப் என இணையம் மட்டுமல்லாது, அனைத்து பத்திரிக்கை மற்றும் ஊடகங்களிலும் அவரை பற்றிய செய்திகளும் அவருக்கான 
அஞ்சலி கவிதைகளும் நிரம்பி வழிகின்றது. 

அன்னாரின் ஆத்மா சாந்தியடைய ஆண்டவனை வேண்டுகிறேன்.

1 கருத்து:

உங்கள் கருத்துக்கள் வரவேற்கப்படுகிறது