இசை லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
இசை லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

சனி, நவம்பர் 22, 2014

பாட்டு கேட்டு பாராட்டு


அனைத்து விதமான ரசிகர்களும் விரும்பும் சிறந்த திரைப்பட காதல் பாடல்கள் எல்லாவற்றிலும் ஒரு ஒற்றுமை இருக்கும். அந்த காதல் பாடல்கள் நம் மனதுக்கு பிடிக்க முக்கிய காரணம் அதன் டியூன் எப்போதும்
மென்மையாகவும் மெலடி மெட்டுக்களாகவும் அமைந்திருக்கும். இசைக் கருவிகள் அடக்கமாக இசைப்பதும், பாடகரும் பாடகியும் மெல்லிய
சுருதியில் பாடுவதும், ஹம்மிங் மற்றும் கோரஸ் போடும் ஜிகினா
குரல்கள் அமைதியாகவும் ஒலிக்கும் இந்த வகையான பாடல்கள் நம் மனதுக்கு உடனே பிடித்து போகின்றது. அனைவரும் விரும்பும் காதல் பாடல்களுக்கே உரிய ஒரு தனி ஃபார்முலா இது.

ஆனா இங்க பாருங்க இந்த காவியக் காதல் பாடல் ஆரம்பம் முதல் முடியும் வரை ஒரே ஆரவாரம். இசைக் கருவிகளின் ஆனந்தத் தாண்டவம். மென்மையான இசையென்றால் உடனே நம் ஞாபகத்துக்கு வரும் புல்லாங்குழல் கூட இங்கே உச்ச ஸ்தாயியில் பின்னி பெடலெடுக்கின்றது. பாடகர்களைப் பற்றியோ சொல்லவே  வேண்டாம். குறிப்பாக TMS. "டட டாடா...டடடட டாடா...." என நீட்டிப் பாடுவதைக் கேட்கும்போது அவருக்கு இரண்டு மூன்று தொண்டைகள் இருந்திருக்குமோ...? என்று தோன்றுகிறது.

இளமைத் துள்ளலுடன் காதல் ரசம் சொட்டும் பாடல் வரிகளும் அசத்தல். குறிப்பாக "அச்சம் இதோடு அடங்கட்டுமென்று அணைத்தேன் மெதுவாக" என்ற வரிகளை கேட்டு அந்தக் கால இளசுகள் அடக்கமுடியாமல் தள்ளாடி தவித்திருப்பர்கள் என்பது நிச்சயம். எத்தனை முறை கேட்டாலும் சலிக்காத பாடல் இல்லையா....?



ஞாயிறு, மார்ச் 30, 2014

பக்தி பரவசமாக ஒரு பாடல் ..


இந்த வலைப்பூ தொடங்கியதிலிருந்தே இசை எனும் தலைப்பில் இந்த பாடலை பதிவு போடவேண்டும்னு நெனச்சுகிட்டே இருந்தேன். இது எனக்கு பிடிச்ச பாடல் மட்டுமல்ல. நான் முதல் முதலா கேட்டவுடன் பிடிச்சதுமான பாடல். நான் பிறந்தது முதல் 5 வயது வரை பாலக்காட்டு பாட்டி வீட்டில்தான் இருந்தேன். அதன் பிறகு சென்னைக்கு  கூட்டி வந்து விட்டார்கள். ஊரில் இருந்த போதே இந்த பாடலை கேட்டிருக்கேன். சென்னைக்கு வந்த பிறகு முதன் முதலா தியேட்டருக்கு சென்று பார்த்த திரைப்படத்தில் இதே பாடலை அதுவும் இரண்டு மூன்று வருடம் கழித்து மீண்டும் கேட்டதால் மனசில் அப்படியே பதிந்து விட்டது என நினைக்கிறேன். மனதை வருடும் மெல்லிய இசை பாடல் முழுவதும் ஏற்ற இறக்கங்கள் ஏதுமின்றி சீராக செல்வதை கவனியுங்கள். இங்கே பதிவில் போட்டிருப்பது மலையாள பாடல். படம் தமிழிலும் மொழிமாற்றம் செய்திருப்பதால் நீங்கள் இதே பாடலை நிச்சயமா தமிழிலும் கேட்டு இருப்பீங்க. வீடியோவில் அந்த சின்னப்பெண் தன்னிரு கைகளைகூப்பி தலைக்குமேல் உயர்த்தி கும்பிட்டபடியே "ஐயப்ப சுவாமி, ஐயப்ப சுவாமி" என பாடும்போது பக்தி பரவசமாக உணர்வீர்கள்.

பாடலை பாடியவர் - அம்பிளி, இசை - தேவராஜன் (மலையாள சினிமாவின் மெல்லிசை மன்னர்), பாடலை இயற்றியவர் - வயலார் ராம வர்மா. படம் - சுவாமி ஐயப்பன்.