சனி, ஆகஸ்ட் 30, 2014

ஓவியமா அல்லது ஓவியனா....?












 




தீபாவளித் திருநாளை முன்னிட்டு
ரூபன்&யாழ்பாவாணன் இணைந்து நடாத்தும்
உலகம் தழுவிய மாபெரும் கவிதைப் போட்டி-2014



ஓவியமா அல்லது ஓவியனா....?

வண்ணமயமான, வல்லமையான
சாந்தமான, சாமர்த்தியமான 
பவித்ரமான, பண்பட்ட
தெய்வீகமான, திறமையான 
அமைதியான, அர்பணிப்பான 
கண்ணைக்கவரும், கைவண்ணமிகுந்த
ரசிக்கும்படியான, ரசனைமிகுந்த 
ஐஸ்வர்யமான, ஆச்சரியமான
சீர்மிகுந்த, மிகச்சிறந்த
அம்சமான, தனித்துவமான
மதிமயக்கும், ஒழுக்கமான
சுண்டியிழுக்கும், சொக்கவைக்கும்
வசீகரமான,  கட்டுகோப்பான
சௌந்தர்யமான, நுணுக்கமான 
சொக்கவைக்கும், வியக்கவைக்கும்
பேரழகான, பேரறிவான 
அச்சினில்வார்த்த, ஆத்மார்த்தமான
நேர்த்தியான ஓவியம், கீர்த்திமிகுந்த ஓவியன்

வெற்றிபெறப் போவது யார்..?

ஓவியமா அல்லது ஓவியனா....?


ஞாயிறு, ஆகஸ்ட் 24, 2014

நால்வகை அறிவு


தீபாவளித் திருநாளை முன்னிட்டு
ரூபன்&யாழ்பாவாணன் இணைந்து நடாத்தும்
உலகம் தழுவிய மாபெரும் கவிதைப் போட்டி-2014





நால்வகை அறிவு



அறிவார் அறிவாரென அறிவார்அவ்
வறிஞரை குருவெனப் பெறுவாய் 

அறிவார் அறிவாரென அறியார் – அவ்
வசடன்கண் திறந்திட துணைவாய்

அறியார் அறியாதென அறிவார் – அப்
பாமரன் அறிந்திட பயிற்றுவாய்

அறியார் அறியவும் விரும்பார் – அம்
மடையனை நெருங்கா தகல்வாய்

சனி, ஆகஸ்ட் 16, 2014

மாஆ................த்தி சூடி

 = எழுத்துக்கெல்லாம் முதன்மை என்ற சிறப்பை விட "அம்மா" என்ற சொல்லுக்கு முதலில் இருப்பதுதானே இதன் பெருமை

= அடிபடும் போதும் சரி ஆச்சரியப்படும் போதும் சரி என்னை மறக்காதே

= உனக்கு முதன் முதலில் கோலம் போட சொல்லி கொடுத்தது நான்தானே

 = "பல்லை இளித்தல்" என்பதை "பல்லை ஈளித்தல்" என்று  மாற்றி சொன்னால் தவறில்லை என்று நினைக்கிறேன்

= கரும்பலகையின் உச்சியில் " " என்று  எழுதியபின் அகரம் தான் முதலெழுத்து என்று வாத்தியார் பாடத்தை தொடங்கினார்.

 = பிறந்த குழந்தை சுவாசம் தொடங்க முகத்தில் "ஊ" என ஊதி உயிர்கொடுத்து வாழ்ந்து முடிக்கையில் சங்கெடுத்து "ஊ" என ஊதி வழியனுப்புகிறோம்

 = என்னுடையது என்பது எங்களுடையது என மாற்றும் நாள் வந்தால் நல்லது

 = "ஏன்" என பிறரிடம் கேட்பது அதிகாரம், ஆணவம் அல்லது அறியாமை. அதையே நீ உன்னிடம் கேட்பது ஞானம், அடக்கம், ஆன்மீகம்,

 = ஐவருக்கு மனைவியான திரௌபதி கர்ணனை பற்றி விசாரிக்க பஞ்ச பாண்டவர்கள் அதிர்ந்தனர்.

 = தலைக்கவிழ்ந்தால் மதிப்புக் குறைந்திடுமே என தலையை உயர்த்தி பிடித்தபடி நிமிர்ந்து நின்றது "ஒன்பது"

 = தேர்தலில் ஓட்டைப் பிரிக்க புதிதாய் முளைத்த கட்சியின் தலைவருக்கு இதற்கு முன் (வீட்டுக் கூரை) ஓட்டை பிரிப்பதுதான் தொழிலாம்.

 = இது ஓரெழுத்து "இரட்டைக் கிளவி" பிரிச்சா போச்சு.

ஃ  =   மூன்று கண்ணுடைய தெய்வத்தை கைகூப்பி வணங்குபவன் மூன்று கண்ணுடைய என்னை வெட்டிக் கொல்கிறானே என தேங்காய் புகார் சொல்லியது

 

வெள்ளி, ஆகஸ்ட் 15, 2014

காண்போர் சொல்வீரோ.....?





1947 இல்
இந்தியாவில்
ஒரு உத்தமர்
இருந்தார்.
இன்று
நோட்டுல
மட்டுமே இருக்கார்.
நாட்டுல
எங்கும் காணோம்.





அனைவருக்கும் எனது இனிய சுதந்திர தின நல்வாழ்துக்கள்