புதன், மார்ச் 25, 2015

கிரிகெட் புதிர்

கிரிகெட் எப்பவுமே ஒரு கணிக்கவே முடியாத ஒரு விளையாட்டு. எப்ப என்ன நடக்கும் எந்த அணி ஜெயிக்கும் எந்த அணி தோற்கும் என்பதை சொல்லவே முடியாது. நல்லா ஆடுறவன் திடீர்னு அவுட் ஆவறதும்,  டம்மியா ஆடுறவன் கடைசி பந்தில் சிக்சர் அடிச்சு  மேட்ச்ச ஜெயிச்சு குடுக்கறதும், உறுதியா ஜெயிச்சிரும்னு தோன்றும் ஒரு ஒரு அணி கடைசி ஓவர்ல தோத்து போறதும் சர்வ சாதாரணமா நடக்கும். இப்படி இன்னும் பல விதமான கிரிகெட் ஆட்டங்களையும், முடிவுகளையும் நீங்க பாத்திருப்பீங்க.

தற்போது நடைபெறும் உலக கோப்பை கிரிகெட் போட்டியில் இந்திய அணி சிறப்பாக ஆடி வருகின்றது. 2011 ஆண்டு நடந்த போட்டியைப் போலவே  இந்த முறையும் வெற்றிபெற்று  கிரிகெட் உலக கோப்பையை 
தக்க வைத்து கொள்ளும் என்றே நினைக்கிறேன். எனக்கு மட்டுமல்ல.
இந்திய கிரிகெட் ரசிகர்கள் அனைவரும் அதைத்தானே விரும்புவர்.



தற்போதைய இந்த கிரிகெட் பரபரப்பில் உங்களுக்கு ஒரு கிரிகெட் புதிர். 
 
இது இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் நடக்குற ஒரு கற்பனை 
ஆட்டம். முதலில் களமிறங்கிய பாகிஸ்தான் அணி  அற்புதமாக  விளையாடி இந்திய அணியின் பந்து வீச்சை சிதறடித்து 50 ஓவர்களில் 9 விக்கெட் இழப்புக்கு 373 ரன்கள் குவித்தது. பின்னர் விளையாடிய
இந்திய அணி தொடக்கத்தில் சற்று பதறியபடி ஆடி சொற்ப
ரன்களுக்குள் மூன்று விக்கெட்டுகளை இழந்தாலும் 
விராட் கொஹ்லியும் சுரேஷ் ரெய்னாவும் தங்களது அதிரடி ஆட்டத்தினை வெளிப்படுத்தி இந்தியாவை வெற்றியின் 
விளிம்புக்கு கொண்டு வந்து விட்டார்கள். 
 
இப்ப ஸ்கோர் போர்ட பாருங்க

இந்தியா 49.4 ஓவர்களில் மூன்று விக்கெட் இழப்புக்கு 371 ரன்கள்.  விராட் கொஹ்லி (நாட் அவுட் - 198 ரன்கள்)  சுரேஷ் ரெய்னா (நாட் அவுட் - 97 ரன்கள்)

இந்திய அணி வெற்றிபெற  இன்னும் இரண்டு பந்தில் மூன்று ரன்கள் மட்டுமே தேவை. வெற்றி எளிதாகிவிட்ட இந்த நேரத்தில் விராட் கொஹ்லிக்கு திடீரென  ஒரு யோசனை தோன்றியது. ரெய்னாவிடம் அதை சொன்னதும் அவன் மகிழ்ச்சியுடன் அதை ஒத்துக் கொண்டான்.
 
அடுத்த பந்தை எதிர்கொள்ள தயாராகிறார் விராத் கொஹ்லி.
5 வது பந்தும் 6 வது பந்தும் வீசி முடித்தபின் ஆட்ட முடிவு இப்படி வருகிறது

இந்தியா 7 விக்கெட் வித்யாசத்தில் வெற்றி பெற்றது. 
விராட் கொஹ்லி இரட்டை சதம். சுரேஷ்  ரெய்னாவும் சதம் அடித்தார்.

வெற்றி பெற இரண்டு பந்துகளில் மூன்று ரன்கள் மட்டுமே மீதமிருந்த நிலையில் இது  எப்படி சாத்தியமாயிற்று. விடை தெரிந்தால் சொல்லுங்களேன்