சனி, பிப்ரவரி 14, 2015

பிரியமானவளே


என் அன்பே உன்னுடன் சேர்ந்து செல்ல நானும் இருந்தேனே...
பொறுமையுடன் காத்திருந்து என்னைக் கைப்பிடித்தபோது
நீயடைந்த அளவில்லா மகிழ்ச்சியை உன் முகத்தில் கண்டேனே...
உன் பயணத்தில் என்னை கையிறுக்கிபிடித்தபடி இருந்தாயே..
உன்னுடன் நானிருக்கும் கர்வம் உன் விழிகளில் கண்டேனே ...
என்மீது நீ காட்டிய பிரியமெல்லாம் ஒரு கணத்தில் 
தவிடுபொடியாய் விடுமென ஒருபோதும் நினைக்கலையே
உன்னுடைய சுயரூபத்தை என்னிடமே காட்டிவிட்டாயே..

உன் பயணம் முடிந்ததும் அந்த கோட்டு போட்டவன் கேட்டான்னு 
என்னை முழுசா கொடுத்திட்டு நீ பாட்டுக்கு போயிட்டீயே.. 
இது நியாயமா..?. 

அதுசரி... இதுக்குமேல ஒரு ரயில் டிக்கெட் 
உங்கிட்ட வேற என்னத்த எதிர்பார்க்க முடியும்......?