கண்முன்னே
ஒரு
கொடுமை
நடக்கையில்
அவன்
தீவிரவாதியாய் மாறிடுவான்.
வெடிகுண்டுகள் வீசி பலரை
பலிவாங்கி
இருக்கிறான்.
கைது
செய்து நீதிமன்றத்தால்
மரணதண்டனை
விதிக்கப்பட்டு
இப்போது
சிறையில்
இருக்கிறான்.
தாய்மொழியில்
பேச
மனுகொடுத்தது
பரிசீலனையில்
உள்ளது.
கருணை
இருந்தால்
சிலசமயம்
அந்த
உரிமை
கிடைக்கலாம்.
இருந்தாலும்
அவன் பேசுவதற்கு
தாய்மொழியில்
இப்போது
வார்த்தைகள்
ரொம்பவும்
குறைவு.
அதிலும்
பாக்கியிருப்பதில் அதிகமுள்ளது
நிமிர்ந்து
உட்காரச்
சொன்னால்
துவண்டு
படுத்துவிடும் வார்த்தைகளே
பேசுவதை
கேட்கின்றவன்
உணர்ச்சியடைந்தாலும்
கண்ணை
உருட்டி
மிரட்டல்
பார்வை
பார்த்தாலே
பயத்தில்
உச்சா போயிடுறான்.