சனி, ஆகஸ்ட் 16, 2014

மாஆ................த்தி சூடி

 = எழுத்துக்கெல்லாம் முதன்மை என்ற சிறப்பை விட "அம்மா" என்ற சொல்லுக்கு முதலில் இருப்பதுதானே இதன் பெருமை

= அடிபடும் போதும் சரி ஆச்சரியப்படும் போதும் சரி என்னை மறக்காதே

= உனக்கு முதன் முதலில் கோலம் போட சொல்லி கொடுத்தது நான்தானே

 = "பல்லை இளித்தல்" என்பதை "பல்லை ஈளித்தல்" என்று  மாற்றி சொன்னால் தவறில்லை என்று நினைக்கிறேன்

= கரும்பலகையின் உச்சியில் " " என்று  எழுதியபின் அகரம் தான் முதலெழுத்து என்று வாத்தியார் பாடத்தை தொடங்கினார்.

 = பிறந்த குழந்தை சுவாசம் தொடங்க முகத்தில் "ஊ" என ஊதி உயிர்கொடுத்து வாழ்ந்து முடிக்கையில் சங்கெடுத்து "ஊ" என ஊதி வழியனுப்புகிறோம்

 = என்னுடையது என்பது எங்களுடையது என மாற்றும் நாள் வந்தால் நல்லது

 = "ஏன்" என பிறரிடம் கேட்பது அதிகாரம், ஆணவம் அல்லது அறியாமை. அதையே நீ உன்னிடம் கேட்பது ஞானம், அடக்கம், ஆன்மீகம்,

 = ஐவருக்கு மனைவியான திரௌபதி கர்ணனை பற்றி விசாரிக்க பஞ்ச பாண்டவர்கள் அதிர்ந்தனர்.

 = தலைக்கவிழ்ந்தால் மதிப்புக் குறைந்திடுமே என தலையை உயர்த்தி பிடித்தபடி நிமிர்ந்து நின்றது "ஒன்பது"

 = தேர்தலில் ஓட்டைப் பிரிக்க புதிதாய் முளைத்த கட்சியின் தலைவருக்கு இதற்கு முன் (வீட்டுக் கூரை) ஓட்டை பிரிப்பதுதான் தொழிலாம்.

 = இது ஓரெழுத்து "இரட்டைக் கிளவி" பிரிச்சா போச்சு.

ஃ  =   மூன்று கண்ணுடைய தெய்வத்தை கைகூப்பி வணங்குபவன் மூன்று கண்ணுடைய என்னை வெட்டிக் கொல்கிறானே என தேங்காய் புகார் சொல்லியது

 

8 கருத்துகள்:

  1. ஃ க்கு ஒண்ணும் அம்புடலையா தலைவரே?

    பதிலளிநீக்கு
  2. வித்தியாசமான சிந்தனைகள்! வாழ்த்துக்கள்!

    பதிலளிநீக்கு
  3. mudhal murai varugiren..!! Tea, Coffee ethuvum illaiyaa Maadhu? ;)

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்கஜி வாங்கஜி........டீ, காபி கூடவே டிப்பனுக்கு தோசை ஸ்பெஷலிஸ்ட் ஸ்ரீராம் சார் கிட்ட ஆர்டர் பண்ணியிருக்கிற ரவா தோசையும் இருக்குஜி

      நீக்கு

உங்கள் கருத்துக்கள் வரவேற்கப்படுகிறது