வெள்ளி, மே 23, 2014

கோச்சடையான் படம் வந்தாச்சே.......


தலைவருக்கு என்னடா வெறும் சாதா தோசை சுத்திகினு இருக்க  



மவனே....போடுறா ஒரு கொத்து பரோட்டா 



செவ்வாய், மே 20, 2014

கைகள் இல்லை. கால்கள் இல்லை. கவலைகள் இல்லை.

நிக்கோலஸ் ஜேம்சு வோய்ச்சிச் (Nicholas James Vujicic) அல்லது சுருக்கமா நிக் வோய்ச்சிச். ஒரு உணர்ச்சிகரமான பேச்சாளர். 
பிறவியிலேயே டெட்ரா-அமெலியா சின்ட்ரோம் என்னும் நோயினால் பாதிக்கப்பட்டதால் இரண்டு கால்களும் இல்லாமல், இரண்டு கைகளும் இல்லாமல் பிறந்தார். ஆரம்பத்தில், இவருடைய ஊனத்தின் காரணமாக கல்வி நிறுவனங்களின் அனுமதி மறுக்கப்பட்டது, பிறகு சட்டத்தில் ஏற்பட்ட மாறுதல்கள் காரணமாக இவர் மனநலம் குன்றியவர்களோடு இணைந்து படிக்கும் சூழல் ஏற்பட்டது.

இவர் தன்னுடைய எட்டாவது வயதில் மனஉளைச்சல் காரணமாக அடிக்கடி தற்கொலை முயற்சிகளில் ஈடுபட்டார். தன்னுடைய பத்தாவது வயதில், தன்னுடைய பெற்றோர்களின் அன்பு காரணமாக, அதனை கைவிட்டார். அவருடைய தாயார், செய்தித்தாளில் வெளியான அவரைப் போன்ற மாற்றுத்திறனாளியின் வாழ்க்கையைப் பற்றி சுட்டிக்காட்டியது அவருக்கு நம்பிக்கையை ஊட்டியது. அதன்பின் தன்னுடைய வாழ்க்கைக்குத் தேவையான அனைத்து பணிகளையும் தானாகவே, வேறொருவரின் உதவியின்றி செய்ய ஆரம்பித்தார். தன்னை எழுதுவதற்கு தயார் செய்தார். பிறகு கணினியில் வேலை செய்வது, டென்னிஸ் பந்துகளை தூக்கி எறிய, ட்ரம்ஸ் இசைக் கருவியை வாசிக்க, தம்ளரில் தண்ணீர் ஊற்றிக் குடிக்க, தலை வாரிக்கொள்ள, பல் துலக்க, நீச்சல் அடிக்க, முகச்சவரம் செய்துகொள்ள மற்றும் தொலைபேசியைப் பயன்படுத்தவும் கற்றுக்கொண்டார்.

தன்னுடைய குறைகளைத் தாண்டி, தன்னுடைய பதினேழாவது வயதில் "லைஃப் வித்அவுட் லிம்ப்ஸ்" என்ற இலாப நோக்கற்ற நிறுவனத்தை துவங்கினார். 2005-ம் ஆண்டு, அந்த ஆண்டின் ஆஸ்திரேலியாவின் சிறந்த நபருக்கான விருதை நிக் வென்றார். நிறைய தொண்டு நிறுவனங்களும் அவருடைய தேவைகளுக்காகவும், மற்றவர்களுக்காக உதவும் இவருடைய நிறுவனத்திற்கும் உதவ முன்வந்தன. 2012-ம் ஆண்டு, கானே மியாகரா என்பவரை திருமணம் செய்து கொண்டார்.

தன்னுடைய 21-ம் அகவையில் கணக்கியல் மற்றும் நிதியியல் திட்டமிடலை இரட்டை பட்டமாக முடித்தபின் மிகப்பிரபலமான பேச்சாளராக உருவானார். சுமார் 5 கண்டங்களில் உள்ள 24 - நாடுகளில் மூன்று மில்லியனுக்கும் அதிமான பள்ளிக் கல்லூரி மாணவர்கள், நிறுவன ஊழியர்கள் என பலதரப்பட்ட மக்களிடம் தன்னம்பிக்கை மற்றும் விடாமுயர்ச்சியின் முக்கியத்துவம் பற்றிய உரையாற்றியுள்ளார். இவர் தன்னுடைய சேவைகளைத் தொலைக்காட்சிகளிலும், புத்தகம் மூலமாகவும் மக்களுக்கு விளக்கி வருகிறார். இவருடைய முதல் புத்தகமான, லைப் வித் அவுட் லிமிட்ஸ் (Life Without Limits: Inspiration for a Ridiculously Good Life) 2010-ம் ஆண்டு வெளியானது. பின்னர் 2005-ஆண்டு தன்னுடைய தினசரி வாழ்க்கையில் தான் செய்யும் செயல்களை லைப் இஸ் க்ரேட்டர் பர்பஸ் (Life's Greater Purpose), என்னும் குறும்படத்தின் மூலமாக வெளியிட்டார். இதுவே இவருடைய முதல் தொழில்முறையான பேச்சாகும். இளைஞர்களுக்காக, நோ ஆர்ம்ஸ், நோ லெக்ஸ், நோ வொர்ரீஸ் (No Arms, No Legs, No Worries: Youth Version) என்ற தொகுப்பினையும் வெளியிட்டார். 

கீழே நான் இணைத்துள்ள வீடியோவில் கை கால்கள் இல்லாமலே இவர் செய்யம் ஆச்சரியமூட்டும் சாகசங்களை பாருங்கள். இணைய வேகம் கருதி இந்த சிறிய அளவிலான வீடியோவினை இணைத்தேன். youtube ல் இன்னும் நிறைய வீடியோக்கள் உள்ளன. எல்லாம் மிகவும் அருமை.   





திங்கள், மே 12, 2014

மனைவிக்கு மரியாதை

நம் வாழ்க்கையில் பதின்ம வயது பருவம் ரொம்ப சங்கடமான ஒன்று. அலைபாயும் மனதை கட்டுபடுத்தி சரியான முடிவுகள் ரொம்ப கடினம். அது போன்றதுதுதான் நாற்பதின்ம வயதும். நாற்பது வயசு நாய் வயசு என்று எங்கோ படித்த ஞாபகம். குடும்பத்தலைவரின் பொறுப்புகளும் கடமைகளும் அதிகரித்து சதா மனசு பன்முக சிந்தனையுடன் முடிவெடுக்க திணறும் காலம். மேலும் இயற்கையாக இந்த பருவத்தில் ரொம்ப தொந்தரவா வீட்டம்மா அடிக்கடி கேட்கத் தொடங்கும் கோடாரிக் கேள்விகள். ஆனா உங்களுக்கிடையே நிலவும் அன்பும் அன்யோன்யமும்தான் இந்த கேள்விக்கணைகளில் பிரதிபலிக்கும். ஆபீஸ் வேலை, அது இதுன்னு ஏதோ யோசனையில் இருந்தபடி அதற்கு பதில் சொன்னா மாட்டிக்கொள்ள வேண்டியிருக்கும். பத்திரிக்கையில் நாம் படிக்கும் கணவன் மனைவி ஜோக்ஸ் நம்ம வீட்டில் உண்மையான மாதிரி ஆயிடும். இதுக்கெல்லாம் ஒரு முடிவே கிடையாதான்னா............"கண்டிப்பா கிடையாது". வேணும்னா நாம பள்ளி / கல்லூரி படித்துக்  கொண்டிருந்த போது தேர்வு நெருங்கும் சமயங்களில் தேர்ந்தெடுத்த முக்கியமான கேள்விகளுக்கான பதில்களை மட்டும் மீண்டும் ஒருமுறை திரும்ப படித்து வைத்துக் கொள்வதுபோல் சில கேள்விகளுக்கு மட்டும் பதில் தெரிந்து வைத்து கொள்ளலாம்.   
இனி உங்களது வாழ்க்கை துணைவியிடமிருந்து எப்போது வேண்டுமானாலும் எதிர் கொள்ள வேண்டியிருக்கும் முக்கியமான இந்த 5 அதிரடி கேள்விகளை மட்டும் அலசுவோம். இந்த கேள்விகளுக்கு நீங்கள் சமயோசிதமாக பதில் சொல்லாவிடில் மோசமான பின்விளைவுகளை சந்திக்க வேண்டியிருக்கும். இதோ அந்த 5 வில்லங்கமான கேள்விகள்

1. இப்ப எதைப்பற்றி யோசனை பண்ணுறீங்க?
2. நீங்க என்னை உண்மையா நேசிக்கிறீங்களா?
3. நான் ரொம்ப குண்டா ஆகிவிட்டேனா?
4. அவள் என்னவிட அழகா இருக்காளா?
5. நான் செத்து போயிட்டா நீங்க என்ன பண்ணுவீங்க?

எச்சரிக்கை. மேலே நீங்கள் படித்த கேள்விகள் அனைத்தும் இரண்டு பக்கமும் கூர்த்தீட்டபட்ட கத்திகள். தவறான அல்லது கவனக்குறைவான உங்களது
பதில்களால் ரத்தகாயங்கள் ஏற்பட அதிக வாய்ப்புகள் உள்ளதால் நன்றாக
யோசித்து பதில் சொல்லவும். நாம வாழ்வது சிலகாலம். அதை நல்லபடியாக தமது துணைவியருடன் வாழ்ந்து விட்டு போயிடலாம்னு ஆசை உள்ள எல்லாவரும் இந்த கேள்விக்கான பதில்களை சுயபரிசோதனை செய்து தெரிந்து வைத்துக்கொள்ளவும்.

1. இப்ப எதைப்பற்றி யோசனை பண்ணுறீங்க?

இதற்கான உசிதமான பதில்: "ஒண்ணுமில்ல செல்லம், இவ்வளவு இலட்சுமிகரமான, ஐஸ்வர்யமான, மங்களகரமான நீ எனக்கு மனைவியா அமைஞ்சது எவ்வளவு அதிர்ஷ்டம்னு நெனைச்சிட்டிருந்தேன்'. ரொம்ப எளிமையாகவும் அதே சமயம் நச்சுன்னு சொன்ன மாதிரியுமான பதிலிது. அடுத்த வீட்டில் இருக்கும் லட்சுமியையோ, ஐஸ்வர்யாவையோ, மங்களத்தையோ நீங்கள் நினைத்துகொண்டிருக்கும் போது இந்த கேள்வி வந்தாலும் கூட பதில் சொல்வது எளிது. உலகெங்கும் உள்ள கணவர்கள் 
மிக அதிகமாக சொல்லி கின்னஸ் உலக சாதனை புத்தகத்தில் இடம் பெற்ற பதில் இது.

2. நீங்க என்னை உண்மையா நேசிக்கிறீங்களா?

"இல்லையா பின்ன?", என்று சொல்லலாம். கூடவே மானே, தேனே, பொன்மானே, கண்ணே, உயிரே, இதயமே, என்றெல்ல்லாம் சேர்த்து போட்டு சொன்னா இன்னும் நல்ல பலன் கொடுக்கும். "தங்கமே" என்று சொல்றது நல்லதுதான் ஆனா இப்பல்லாம் நகைக்கடைப் பக்கம் நாம் திரும்பி பார்ப்பதே இல்லை என்பதால் அதை கவனத்துடன் உபயோகிக்கவும். எக்காரணம் கொண்டும் கீழ்கண்ட பதில்கள் வாய்தவறியும் சொல்லாமல் இருக்க தீவிர பயிற்சி எடுத்து கொள்ளவும்.
 
"அப்பிடித்தான்னு நெனைக்கிறேன்"
"ஆமான்னு சொன்னா உனக்கு சந்தோஷமா?"
"ஏன் கேட்கிற?"
"நானா?"

3. நான் ரொம்ப குண்டா ஆகிவிட்டேனா?

"இந்த கேள்விக்கு அதிகபட்ச தைரியத்துடன் பதற்றப்படாமல் "இல்லை' என்று சொல்லவும். சொல்லி முடித்த உடனே ஒரிரு முறை நீண்ட பெருமூச்சு விட்டுக்கொண்டு விட்டால் உங்கள் 
ரத்த அழுத்தம் சாதாரண நிலைக்கு வந்துவிடும்.

தவிர்க்க வேண்டிய பதில்கள்.

"ரொம்ப குண்டும் இல்லை. ரொம்ப ஒல்லியாவும் இல்லை."
"யார்கூட கம்பேர் பண்ணுறப்போ?"
"உன் வயசுக்கு கொஞ்சம் அதிகம்தான்"
"உன்னவிட குண்டா நெறையபேர் இருக்காங்க. கவலைப்படாத."

4. அவள் என்னவிட அழகா இருக்காளா?

இது அவளிடம் நீங்கள் உளறிகொட்டிய உங்களது பழைய காதலியை பற்றியதாகவோ, சமீபத்தில் நீங்கள் பார்த்த திரைப்படத்தின் கதாநாயகியை பற்றியதாகவோ அல்லது அவளுடன்  நீங்கள் வெளியே செல்லும்போது வழியில் வைத்து பார்த்து ஜொள்ளுவிட்ட ஒரு ஜிகிடியை பற்றியதாகவோ இருக்கலாம். 
இதற்கு ஒரு பாதுக்காப்பான பதில் "இல்லவே இல்லை. நீதான் அவளைவிட அழகு"

தவறுதலான பதில்கள் 

"அவ அழகா இருந்தா என்ன? அசிங்கமா இருந்தா என்ன?"
"அவ சின்ன வயசு, அதோட கொஞ்சம் வெள்ளையா, ஸ்லிம்மா இருக்கா"
"ஆனா அழகு மனசில தானே இருக்கு"
 
5. நான் செத்து போயிட்டா நீங்க என்ன பண்ணுவீங்க?

சரியான பதில், "என் கண்ணே, நீ என்ன விட்டு போயிட்டா நான் ஒரு நிமிஷம் கூட உயிரோட இருக்க மாட்டேன். அடுத்த லோக்கல் ரயில் வண்டி வரதுக்கு முன்னால தண்டவாளத்துல என் தலையை வச்சிடுவேன்".

முன்னெச்சரிக்கை இல்லாத பதிலால் கீழே சொல்லிய ஒரு பழைய கதையின்படி 
நடக்கவும் வாய்ப்பு உண்டு 

"என்னங்க, நான் செத்து போயிட்டா நீங்க என்ன பண்ணுவீங்க?"
"என்ன கேள்வி இது? நான் ரொம்ப கவலைப்படுவேன்"
"நீங்க வேற கல்யாணம் செஞ்சுப்பீங்களா?"
"என்ன பேசற? அதெல்லாம் செய்ய மாட்டேன்"
"ஏன் கல்யாண வாழ்க்கை சலிச்சு போச்சா?"
"அப்படியெல்லாம் இல்லை" (கொஞ்சம் யோசிச்சபடி)ஒருவேளை செய்ய வேண்டியிருக்கலாம்"
"செய்வீங்களா....?"
"ஆமா"
"செஞ்சுட்டு அவகூட இந்த வீட்டிலேயே தங்குவீங்களா?"
"தங்காம, வேற எங்க போறது?"
"நானும் நீங்களும் சேர்ந்து இருக்கிற போட்டோவ கழட்டி வச்சிட்டு அவளும் நீங்களும் 
சேர்ந்து இருக்கிற போட்டோவ மாட்டி வைப்பீங்களா?"
"ஆமா அதுதானே சரி"
"என்னோட தங்க நகைகள், துணிமணிகள் எல்லாத்தையும் அவள் எடுத்துக்குவாளா?"
"துணிமணிகள் எடுக்கமாட்டான்னு நெனைக்கிறேன். அவ சுடிதார் எல்லாம் போடறதில்லை" 

வாய்பேச முடியாத ஊமைகளிடமும், காது கேட்காத செவிடர்கள் மீதும் நாம் பொறாமை கொள்ளும் தருணங்கள் இவை.

கடைசியா ஒரு பஞ்ச்

தான் செய்தது சரியில்லை என்றால் தப்புன்னு ஒத்துக்கொள்பவனே சத்தியசீலன்.
தான் செய்தது சரியா தப்பான்னு அறுதியிட்டு உறுதிபடுத்திக்  கொள்பவனே ஞானி.
தான் செய்தது சரியாக இருந்தாலும் தப்புன்னு ஒத்துக்கொள்பவனே நல்ல கணவன்   

திங்கள், மார்ச் 31, 2014

முட்டாள்கள் தினம் உருவான கதை

முன்னொரு காலத்தில் மேற்கே ஏழு கடல் ஏழு மலை தாண்டியுள்ள அமாரிகோ என்ற ஒரு ஊரில் (ஊர் பெயர் உதவி-மூன்றாம்சுழி அப்பாதுரை அவர்கள்) கிளின்டன்வர்மன் என்றொரு அரசன் இருந்தான்(எந்த ஊரில் நடப்பதாக இருந்தாலும் தமிழ் கதைகளில் ராஜாவுடைய பெயர் வர்மன் என்றுதான் இருக்கும் அதனால் மேற்கொண்டு தகராறு எதுவும் பண்ணாம கதைய படிங்க). ராஜாவும் ராணி ஹிலாரியம்மாவும் நல்லாட்சி புரிந்துவந்த  நேரத்தில் அந்த ஊருக்கு கிழக்கே பாரதம் என்ற ஊரிலிருந்து ஒருவன் சாப்ட்வேர் 
எஞ்சினீயர் என்ற உருவத்துடன் வந்து சேர்ந்தான்.

அவனது பெயர் லபக்தாஸ். பள்ளிக்கூடத்தில் படிக்கும் போது Lord. இர்வின், Lord. மவுண்ட் பேட்டன், Lord. வெலிங்க்டன் இவுங்களப் பத்தியெல்லாம் படிச்சிட்டு அவுங்கள மாதிரி பெரிய ஆபீசரா ஆகி தன்னோட பேருக்கு முன்னாடியும் Lord பட்டத்தை சேர்த்திட்டு லபக்தாஸ் என்ற தனது பெயரை Lord லபக்தாஸ் - னு மாத்திக்கணும் என்பதுதான் அவனது ஒரே இலட்சியம்.
 
"டுபாகூர் ஈஸ்ட்" என்ற சாப்ட்வேர் கம்பெனியில் ஆன்சைட் அசைன்மென்ட் வேலைக்காக நம்ம லபக்தாஸ் அமாரிகோவின் வாஷிங்க்டபுரத்துக்கு வந்திருக்கிறான். இவரப்பத்தி சொல்லணும்னா, இவர் நம்ம கோயமுத்தூர்காரர். அதனால  கொஞ்சம் குசும்பு அதிகம் (கொஞ்சமா........ ? அதிகமா..........? சரியாய் சொல்லு என கேட்டால் - ரொம்ப அதிகம் போதுமா). கூட வேலை பார்க்கும் அமரிக்கோ  ஊருக்காரங்க எல்லாரையும் எப்பவும் ஏதாவது சிக்கல்ல மாட்டிவிட்டு அவுங்க படும் அவஸ்தையை நல்லா பாத்து ரசிப்பதுதான் இவரோட முக்கிய பொழுதுபோக்கு.

கூட வேலை செய்யும் மற்ற பணியாட்களின் e-mail பாஸ்வேர்டை திருடி அவர்களுடைய e-mail மூலமாக உயரதிகாரிகளுக்கு மொட்டைக்கடிதாசி (அடேய்.....பாவி அதுக்குப்பேர்  e-mailடா) அனுப்பி அவுங்களோட அப்ரைஸலுக்கு வெட்டு வைப்பது, அடுத்தவனோட ID கார்ட திருடி அதுக்கு பதிலா தன்னோட ID கார்ட வச்சிட்டு, திருடின ID கார்ட தேச்சிட்டு வெளியே வந்து ஊர்சுத்த சென்றுவிடுவது, மீட்டிங் ரூம் கதவில் "இந்த அறைக்கு உள்ளே நடைபெறும் கசமுசா" என கண்டபடி எழுதிவைப்பது. இதெல்லாம் சும்மா சின்ன சின்ன சாம்பிள்தான்.  

ஆபீஸில் வேலை செய்யும் அத்தனை அமாரிகோ பயலுகளுக்கும் லபக்தாஸோட இந்த மாதிரியான சேட்டைகளை தாங்க முடியவில்லை. இவனால் பாதிக்கப்பட்ட எல்லாரும் ஒண்ணா கூடிப்பேசி ஒரு முடிவுக்கு வந்தாங்க. அதாவது முள்ளை  முள்ளால் எடுப்பது / இத்தனை நாள் அவன் தங்களுக்கு கொடுத்த மருந்தை அவனுக்கே கொடுப்பது /பழிக்குப்பழி என எப்படி வேண்டுமானாலும் வைத்துக்கொள்ளலாம். சரியான சமயம் பார்த்து 
திட்டத்தை செயல் படுத்தினாங்க. அன்று ஒரு மார்ச் 31 தேதி. அவுங்க எல்லாரும் HR Dept. மெயில் IDயை ஹேக் செய்து நம்ம லபக்தாஸுக்கு அனுப்ப இருந்த சம்பள ரசீதில் நான்கு பூஜியத்தை கூடுதலா சேர்த்து விட்டனர். மறுநாள் காலை ஆபீஸுக்கு வந்த நம்ம லபக்தாஸ் மெயில பார்த்ததும் அதிர்ச்சி அடைந்தான்.
 
சென்னை டைடல் பார்க் பக்கத்துல 10 ஏக்கர் நிலம் வாங்க  போதுமான பணம் கிடைத்ததை அறிந்த லபக்தாஸ் ஆன்லைன்ல பேங்க் வெப்சைட்ல தனது அக்கவுன்ட்ட கூட பார்க்காமல் அற்பனுக்கு வாழ்வு வந்த மாதிரி ஒரு நொடியில் மொத்தமா மாறிபோயிட்டான். எப்பவும் திட்டிகொண்டிருந்த மேனேஜர் முன்னாடி போயி நின்னு அவரை கன்னா பின்னான்னு திட்டத்  தொடங்கினான். அன்னைக்கு விசிட்டுக்கு வந்த கம்பெனி M.D கிளிண்டன் வர்மன் மகாராஜாவையும் அவன் விட்டுவைக்கவில்லை. எதாவது பண்ணி கம்பெனியை விட்டு எஸ்கேப் ஆகணும் என்பதுதான் அவனோட திட்டம். 
 
கடைசியில் ஒரு வழியாக சண்டைய போட்டு முடிச்சு, விட்டா போதும்னு ஒரே ஓட்டமா வெளியே ஓடி வந்துவிட்டான். ஏர்போர்ட் பக்கத்தில ஒரு கவுண்டரில் தனது பேங்க் அக்கவுண்ட் பேலன்ஸ் பார்த்தவுடன் "அப்பிடியே ஷாஆஆஆஆஆஆக்க்க்க்க்க்க்க்க்க்க்" ஆயிட்டான். பைத்தியம் புடிச்ச குரங்கினை தேளும் கொட்டியதுபோல் ராஜாவ திட்டிய குற்றத்துக்காக கைதும் செய்யப்பட்டான். 
 
ஆனா நம்ம ராஜா ரொம்ப நல்லவர். நடந்ததை எல்லாம் கேட்டவுடன் அவர் பரிதாப நோயில் வீழ்ந்தார். இரண்டு பக்கத்தினரின் நியாமான நிலையினை புரிந்து கொண்ட அவர் சம்பவம் நடந்த அந்த நாளை முட்டாள்கள் தினமாக அறிவித்தார். இனி எல்லா வருடமும் ஏப்ரல் ஒன்றாம் தேதி யார் வேண்டுமானாலும் யாரை வேண்டுமானாலும் ஏமாற்றலாம் என சட்ட திருத்தத்தை (இபிகோ - இருநூற்றி நாப்பத்தி எட்டுன்னுன்னு ஞாபகம், சரியா தெரியல) கொண்டுவந்து அதை உடனே தண்டோரா போட்டு அறிவிக்க உத்தரவிட்டார். 

எப்படியோ தண்டனையிலிருந்து தப்பித்து ஊர் திரும்பிய நம்ம லபக்தாஸுக்கு மட்டும் இன்னும் பைத்தியம் தெளியவில்லை. அவன் இப்போது யாரையும், ஏப்ரல் ஒன்றாம் தேதியா இருந்தா கூட ஏமாத்துறதில்லை.


ஞாயிறு, மார்ச் 30, 2014

பக்தி பரவசமாக ஒரு பாடல் ..


இந்த வலைப்பூ தொடங்கியதிலிருந்தே இசை எனும் தலைப்பில் இந்த பாடலை பதிவு போடவேண்டும்னு நெனச்சுகிட்டே இருந்தேன். இது எனக்கு பிடிச்ச பாடல் மட்டுமல்ல. நான் முதல் முதலா கேட்டவுடன் பிடிச்சதுமான பாடல். நான் பிறந்தது முதல் 5 வயது வரை பாலக்காட்டு பாட்டி வீட்டில்தான் இருந்தேன். அதன் பிறகு சென்னைக்கு  கூட்டி வந்து விட்டார்கள். ஊரில் இருந்த போதே இந்த பாடலை கேட்டிருக்கேன். சென்னைக்கு வந்த பிறகு முதன் முதலா தியேட்டருக்கு சென்று பார்த்த திரைப்படத்தில் இதே பாடலை அதுவும் இரண்டு மூன்று வருடம் கழித்து மீண்டும் கேட்டதால் மனசில் அப்படியே பதிந்து விட்டது என நினைக்கிறேன். மனதை வருடும் மெல்லிய இசை பாடல் முழுவதும் ஏற்ற இறக்கங்கள் ஏதுமின்றி சீராக செல்வதை கவனியுங்கள். இங்கே பதிவில் போட்டிருப்பது மலையாள பாடல். படம் தமிழிலும் மொழிமாற்றம் செய்திருப்பதால் நீங்கள் இதே பாடலை நிச்சயமா தமிழிலும் கேட்டு இருப்பீங்க. வீடியோவில் அந்த சின்னப்பெண் தன்னிரு கைகளைகூப்பி தலைக்குமேல் உயர்த்தி கும்பிட்டபடியே "ஐயப்ப சுவாமி, ஐயப்ப சுவாமி" என பாடும்போது பக்தி பரவசமாக உணர்வீர்கள்.

பாடலை பாடியவர் - அம்பிளி, இசை - தேவராஜன் (மலையாள சினிமாவின் மெல்லிசை மன்னர்), பாடலை இயற்றியவர் - வயலார் ராம வர்மா. படம் - சுவாமி ஐயப்பன்.






 

திங்கள், மார்ச் 24, 2014

படித்தபடி...... ரசித்தபடி..... சிரித்தபடி..... 2

ஆண் : "ஹலோ"

பெண் : "செல்லம், நான்தான். இன்னும் GYM - லதான்  இருக்கீங்களா?

ஆண் : "ஆமா, என்ன விஷயம்"

பெண் : "ஷாப்பிங் பண்ணிட்டு வர்ற வழியில சும்மா பாக்கலாமேன்னு Benz கார் ஷோரூமுக்குள்ள போனேன். SL550 - 2014 மாடல் கார். பாத்து கண்ணு பூத்துபோச்சு. ஏன்னா அழகு. வச்ச கண்ண எடுக்க முடியல. ஒண்ணு புக் பண்ணிடவா....?

ஆண் : "எவ்வளவு ஆகும்....?"

பெண் : மாசம் 2,20,000/- EMI, ஜஸ்ட் 5 வருஷத்துக்கு. நம்ம ஜாயிண்ட் அக்கவுண்ட்ல லோன் கூட ஓகே ஆயிடுச்சு.

ஆண் : "உன் இஷ்டம். முழுப்பணமும் லோனாவே குடுபாங்களான்னு கேட்டுக்கோ?"

பெண் : "செல்லம்னா....செல்லம்தான். உம்ம்ம்மா.........ஐ லவ் யூ டா.........எங்க நீ சம்மதிக்க மாட்டியோன்னு நெனச்சேன். இன்னிக்கிதான் என் வாழ்கையில ரொம்ப சந்தோஷமான நாள். தாங்க்ஸ்டா. லோன் டாக்குமெண்டேஷன முடிச்சிட்டு அப்பறமா பேசுறேன். பை டியர்......"

ஆண் : "பை, ஐ லவ் யூ டூ "

ஆண் போனை வைத்தான். GYM ல இருந்த அனைவரும் அவரை அதிசயமாகவும் கொஞ்சம் பொறாமையுடனும் பார்த்தனர். கையிலிருந்த மொபைல் போனை உயர்த்தி பிடித்தபடி அவன் கேட்டான். "யாருதுப்பா இந்த மொபைல்.....?"


.


 



ஞாயிறு, மார்ச் 23, 2014

பாப்கார்னின் குணநலன்கள்

எந்த தியேட்டரா இருந்தா என்ன? என்ன படமா இருந்தா என்ன? இடைவேளை சமயத்துல நாம எல்லாரும் வாங்கி சாப்பிடுற ஒரு முக்கியமான நொறுக்கு தீனி பாப்கார்ன்தான். இது உங்க நேரத்த போக்கறதுக்கு மட்டுமான சிற்றுணவு (SNACKS-சரியா ..?) மட்டுமல்ல. உங்களது ஆரோக்கியத்திற்கு மிக அத்தியாவசியமான அநேக ஊட்டச்சத்துகள் இதில் அடங்கியுள்ளது.  
 
கொழுப்பு குறைந்த, அதிக நார் சத்துக்கள்  அடங்கிய பாப்கார்ன் ஒரு உன்னதமான பொருள் என்பது முன்னமே அறிந்த ஒரு உண்மையாகும். ஆனால் அறிவியலாளர்கள் பாப்கார்னின் கூடுதலான பலன்களையும் கண்டுபிடித்துக் கூறியுள்ளனர். பழங்கள் மற்றும் காய்கறிகளில் உள்ளவற்றை காட்டிலும் அதிக சத்துக்கள் பாப்கார்னில் இருக்கின்றதாம். 
புற்றுநோய், இதயநோய், மறதிநோய் வருவதற்கான வாய்ப்புகளை குறைக்க பாப்கார்ன் பெரிதும் உதவுகின்றது. இதில் அடங்கியுள்ள ஆன்ட்டி ஆக்ஸைடன்ட் (Antioxidant) என்ற உயிர் வளியேற்ற எதிர்ப்பொருள் நம் உடலுக்கு தேவையான நோய் எதிர்ப்பு சக்தியை கொடுக்கின்றது. மேலும் உயிரணுக்களுக்கு பாதிப்பு ஏற்படுத்தும் கிருமிகளை உடலுக்குள் வராமல் தடுக்கும் போளிபெனோல்ஸ் (Polyphenols) நிறைந்தது.
 
மற்ற தின்பண்டங்கள் போன்று இல்லாமல் முழுவதும் மக்கா சோளம் தானியம் மட்டுமே உபயோகித்து பாப்கார்ன் செய்யப்படுகிறது. ஒருநாளைக்கு ஒரு நபருக்கு தேவையான தானிய சத்தின் 70 சதவிகிதம் கொடுக்க பாப்கார்ன் உதவுகிறது. சுருக்கமாக சொல்வதென்றால் இது மிகச்சிறந்த ஒரு தானிய உணவு.
பாப்கார்னில் இயல்பாக சர்க்கரை இல்லாததால் நீரிழிவு நோயாளிகளுக்கு இவை பரிந்துரைக்கப்பட்டாலும், இப்போது விற்கும் பாப்கார்ன் தேங்காய் எண்ணெய், கேராமல், சாக்லேட்டு போன்றவற்றைச் சேர்த்துச் செய்வதால் அவை பெரும் தீங்கு விளைவிக்கக் கூடும்.  

 

  

 

 

 

 

 

 

 

 

 
 




 

 

 
 



 

.