சனி, ஆகஸ்ட் 30, 2014

ஓவியமா அல்லது ஓவியனா....?












 




தீபாவளித் திருநாளை முன்னிட்டு
ரூபன்&யாழ்பாவாணன் இணைந்து நடாத்தும்
உலகம் தழுவிய மாபெரும் கவிதைப் போட்டி-2014



ஓவியமா அல்லது ஓவியனா....?

வண்ணமயமான, வல்லமையான
சாந்தமான, சாமர்த்தியமான 
பவித்ரமான, பண்பட்ட
தெய்வீகமான, திறமையான 
அமைதியான, அர்பணிப்பான 
கண்ணைக்கவரும், கைவண்ணமிகுந்த
ரசிக்கும்படியான, ரசனைமிகுந்த 
ஐஸ்வர்யமான, ஆச்சரியமான
சீர்மிகுந்த, மிகச்சிறந்த
அம்சமான, தனித்துவமான
மதிமயக்கும், ஒழுக்கமான
சுண்டியிழுக்கும், சொக்கவைக்கும்
வசீகரமான,  கட்டுகோப்பான
சௌந்தர்யமான, நுணுக்கமான 
சொக்கவைக்கும், வியக்கவைக்கும்
பேரழகான, பேரறிவான 
அச்சினில்வார்த்த, ஆத்மார்த்தமான
நேர்த்தியான ஓவியம், கீர்த்திமிகுந்த ஓவியன்

வெற்றிபெறப் போவது யார்..?

ஓவியமா அல்லது ஓவியனா....?


ஞாயிறு, ஆகஸ்ட் 24, 2014

நால்வகை அறிவு


தீபாவளித் திருநாளை முன்னிட்டு
ரூபன்&யாழ்பாவாணன் இணைந்து நடாத்தும்
உலகம் தழுவிய மாபெரும் கவிதைப் போட்டி-2014





நால்வகை அறிவு



அறிவார் அறிவாரென அறிவார்அவ்
வறிஞரை குருவெனப் பெறுவாய் 

அறிவார் அறிவாரென அறியார் – அவ்
வசடன்கண் திறந்திட துணைவாய்

அறியார் அறியாதென அறிவார் – அப்
பாமரன் அறிந்திட பயிற்றுவாய்

அறியார் அறியவும் விரும்பார் – அம்
மடையனை நெருங்கா தகல்வாய்

சனி, ஆகஸ்ட் 16, 2014

மாஆ................த்தி சூடி

 = எழுத்துக்கெல்லாம் முதன்மை என்ற சிறப்பை விட "அம்மா" என்ற சொல்லுக்கு முதலில் இருப்பதுதானே இதன் பெருமை

= அடிபடும் போதும் சரி ஆச்சரியப்படும் போதும் சரி என்னை மறக்காதே

= உனக்கு முதன் முதலில் கோலம் போட சொல்லி கொடுத்தது நான்தானே

 = "பல்லை இளித்தல்" என்பதை "பல்லை ஈளித்தல்" என்று  மாற்றி சொன்னால் தவறில்லை என்று நினைக்கிறேன்

= கரும்பலகையின் உச்சியில் " " என்று  எழுதியபின் அகரம் தான் முதலெழுத்து என்று வாத்தியார் பாடத்தை தொடங்கினார்.

 = பிறந்த குழந்தை சுவாசம் தொடங்க முகத்தில் "ஊ" என ஊதி உயிர்கொடுத்து வாழ்ந்து முடிக்கையில் சங்கெடுத்து "ஊ" என ஊதி வழியனுப்புகிறோம்

 = என்னுடையது என்பது எங்களுடையது என மாற்றும் நாள் வந்தால் நல்லது

 = "ஏன்" என பிறரிடம் கேட்பது அதிகாரம், ஆணவம் அல்லது அறியாமை. அதையே நீ உன்னிடம் கேட்பது ஞானம், அடக்கம், ஆன்மீகம்,

 = ஐவருக்கு மனைவியான திரௌபதி கர்ணனை பற்றி விசாரிக்க பஞ்ச பாண்டவர்கள் அதிர்ந்தனர்.

 = தலைக்கவிழ்ந்தால் மதிப்புக் குறைந்திடுமே என தலையை உயர்த்தி பிடித்தபடி நிமிர்ந்து நின்றது "ஒன்பது"

 = தேர்தலில் ஓட்டைப் பிரிக்க புதிதாய் முளைத்த கட்சியின் தலைவருக்கு இதற்கு முன் (வீட்டுக் கூரை) ஓட்டை பிரிப்பதுதான் தொழிலாம்.

 = இது ஓரெழுத்து "இரட்டைக் கிளவி" பிரிச்சா போச்சு.

ஃ  =   மூன்று கண்ணுடைய தெய்வத்தை கைகூப்பி வணங்குபவன் மூன்று கண்ணுடைய என்னை வெட்டிக் கொல்கிறானே என தேங்காய் புகார் சொல்லியது

 

வெள்ளி, ஆகஸ்ட் 15, 2014

காண்போர் சொல்வீரோ.....?





1947 இல்
இந்தியாவில்
ஒரு உத்தமர்
இருந்தார்.
இன்று
நோட்டுல
மட்டுமே இருக்கார்.
நாட்டுல
எங்கும் காணோம்.





அனைவருக்கும் எனது இனிய சுதந்திர தின நல்வாழ்துக்கள் 

திங்கள், ஜூலை 21, 2014

திரையில் ரசித்த மாடிப்படிகள் - 2

என்னைப் போலவே இந்த படத்தோட இயக்குனருக்கும் மாடிப்படின்னா ரொம்ப பிடிக்கும் என்று நினைக்கிறேன். பாருங்களேன், பாட்டு தொடங்கி முடியும்வரை அந்த அழகான மாடிப்படியிலேயே படம் பிடித்திருக்காங்க. கதாநாயகி மாடிப்படியிலேயே ஆடவும் செய்றாங்க.




 

ஞாயிறு, ஜூலை 20, 2014

உறைந்த உறக்கம்

இணையத்தில் படித்த ஒரு நகைச்சுவை.ஒரு பிரபல இருதய அறுவை சிகிச்சை மருத்துவர், பழுதுபார்க்க கொடுத்திருந்த தனது வாகனத்தை திருப்பி எடுப்பதற்காக மெக்கானிக் ஷெட்டுக்கு வந்திருந்தார்.அவரை அடையாளம்கண்டவுடன்  அங்கிருந்த ஒரு  மெக்கானிக் அவரிடம்  சென்று "டாக்டர் நான் உங்களிடம் ஒரு கேள்வி கேட்கலாமா? என்றான். சற்றே ஆச்சரியத்துடன் டாக்டர் சம்மதித்தார். அவன் உடனே "இங்க இருக்கும் வண்டிகளில் உள்ள எஞ்சினும் மனிதனின் இதயம் போன்றதுதான்.இதயத்தை கிழித்து ரத்தக்குழாய்களின் அடைப்பை  நீக்கி,தேவைப்பட்டால் வெட்டி நீக்கி தையலிட்டு இணைத்து அதை மீண்டும் ஒரு  புதிய இதயம் போல்  நீங்கள் இயங்க செய்கிறீகள்.நானும் அதேபோல் என்ஜினில் பழுதடைந்த உதிரிபாகங்களை மாற்றி  பொருத்தி  புதிய  எஞ்சின் போல மாற்றுகிறேன். நீங்களும் நானும் ஏறக்குறைய ஒரே வேலையை  செய்தாலும் நீங்கள் என்னைவிட அதிகம் பணம் வாங்குகிறீர்களே இது நியாயமா..?" என்று கேட்டான். டாக்டர் பொறுமையாக அவன் அருகில் வந்து, நீ சொல்வதெல்லாம் சரி தம்பி, ஆனால் எஞ்சின் இயங்கிக்கொண்டிருக்கும் போதே உன்னால் இந்த வேலைகளை செய்யமுடியுமா?" என்று கேட்டார்டாக்டரின் பதிலில் பொதிந்திருந்த உண்மையை  உணர்ந்த  மெக்கானிக்   தலையை குனிந்தான். 

இனி விஷயத்துக்கு வருவோம். இருதயம் துடிப்பை நிறுத்துகிறது. மூளை வேலையை நிறுத்துகிறது. உடம்பில் ஒரு சொட்டு இரத்தம்கூட மிச்சமில்லை.  பதிலாக இரத்த குழாய்களில்,தமனிகளில்  குளிர்ந்த  உப்புநீர் நிறைந்து நிற்கிறது. மருத்துவ சொல்லாடலில் இந்த நிலையினை மரணம் என்று சொல்லுவர். ஆனால் நவீன மருத்துவம் இதனை உறைநிலை உறக்கம் என்று சொல்கிறது. உயிருக்கு சற்று நேரம் மட்டும் ஒய்வு. சில மணி நேரத்திற்கு பின் தமனிகளில் உள்ளஉப்புநீரை வெளியேற்றி மீண்டும் இரத்தத்தை செலுத்திய பின்  இதயம் மீண்டும் துடிக்க தொடங்குகிறது. மூளை தன் வேலைகளை  தொடர்கிறது.ஆழ்ந்த உறக்கத்தில் இருக்கும் மனிதனுக்குள் உயிர்வந்து குடிகொள்கிறது. 

என்ன இதெல்லாம்...? ஏதாவது விட்டலாச்சாரியார் படம் பாத்துட்டு பதிவு எழுதுரீங்களான்னு கேட்காதீங்க. 
இது சாத்தியமாகும் நாள் தொலைவில் இல்லை. அறிவியல் சார்ந்த கற்பனை கதைகளில் மட்டுமே நாம் 
படித்து வந்த, நூறு சதவிகிதமும் சுத்தமான பொய் என்று தோன்றும் இந்த மருத்துவ சிகிச்சை முறையில் 
மனிதர்களுக்கு சிகிச்சை அளிக்க மருத்துவ உலகம் தயாராகி விட்டது. 
எமர்ஜென்சி பிரசர்வேஷன் & ரீசஸிட்டேஷன் என்ற பெயருடைய இந்த சிகிச்சை முறை விபத்தில் 
டுகாயம் அடைபவர்களும் மாரடைப்பு நோயாளிகளுக்கும் அவசர சிகிச்சை வேண்டுபவர்களும் 
எதிர்பார்க்கும் புதிய வழி சிகிச்சையாகும். மிருகங்களில் நடத்திய சோதனைகளில் இந்த சிகிச்சை 
முறை 90 சதவிகிதம் வெற்றியடைந்துள்ளது.

ஒரு விபத்தில் படுகாயமடைந்த அல்லது மாரடைப்பு ஏற்பட்ட ஒருவருக்கு எவ்வளவு விரைவாக 

மருத்துவ சிகிச்சை கிடைக்கிறதோ அந்த அளவு அவரது உயிருக்கு ஆபத்தும் குறைகிறது. நேரம் 
அதிகரிக்க அதிகரிக்க உயிர்பிழைக்கும் வாய்ப்பு குறைகிறது. விபத்தில் ஏற்படும் இரத்த இழப்பு, 
கை, கால் எலும்பு முறிவுகள் ஏற்படுவதுடன் உள் அவயங்களான ஈரல், சிறுநீரகம் போன்றவையும் 
சில சமயம் பாதிப்படையலாம். இங்கு சிகிச்சைக்கான நேரம் மிக முக்கியம். துரதிஷ்டவசமாக 
விபத்தில் சிக்கியவருக்கு அது கிடைப்பதில்லை..அதற்கு சரியான தீர்வுதான் இந்த 
"உறைந்த உறக்க" சிகிச்சை முறை. 

விபத்து நடந்தவுடன் விபத்தில் சிக்கியவருக்கு எற்படும் காயம் மற்றும் இரத்த இழப்பினை கருத்தில் 
கொண்டு அவரது உடலில் இருந்து இரத்தத்தை நீக்கி குளிர்ந்த உப்பு நீரை ஏற்றியபின் சிகிச்சை 
தொடங்குகிறதுஉப்பு நீரை எற்றியபின் உடலின் வெப்பநிலை 20 டிகிரியாக குறைகிறது. உடனடியாக 
மூளையும், இருதயமும் அமைதியாக தத்தமது வேலைகளை நிறுத்தி வைக்கிறது. உடலுக்கு 
தேவைப்படும் ஆக்சிஜன் அளவு வெகுவாக குறைகிறது. மருத்துவ அறிவியலின்படி 
ஆளு “டிக்கெட் வாங்கிட்டாரு”. இந்த சமயத்தில் உடலில் ஏற்பட்ட காயங்களில் தையல் போடுவது 
மற்றும் அறுவை சிகிச்சைகள் செய்வது போன்ற வேலைகள் நடக்கும். இந்த சமயத்தில் என்ன 
செய்தாலும் உடல் சலனமில்லாமல் இருக்கும். எல்லாம் முடித்த பிறகு உப்பு நீரை வெளியெற்றி 
மீண்டும் இரத்தம் ஏற்றப்படும். இருதயம் மீண்டும் துடிக்கத் தொடங்கும். மூளை வேலை செய்ய தொடங்கும். 
இடைவேளை முடிந்து திரைப்படம் தொடங்குவது போல் உயிர் மீண்டும் உடலுக்கு திரும்பிவரும். 

இந்தமாதம் அமெரிக்காவில் பென்சில்வானியாவில் உள்ள யூனிவெர்சிட்டி ஆப் பிட்ஸ்பர்க் மெடிக்கல் 
சென்டரில் Dr.சாமுவேல் டிஷ்மான் தலைமையில் மருத்துவர்கள் விபத்தில் சிக்கி அவசர சிகிச்சை 
தேவைப்படும் 10 நபர்களுக்கு சோதனை அடிப்படையில் இந்த சிகிச்சையினை கையாளப் போகின்றனர். 
14 ஆண்டுகளுக்கு முன் Dr.பீட்டர் ரீ கண்டுபிடித்த இந்த வித்தை எலிகள் மற்றும் பன்றிகள் மீது 
வெற்றிகரமாக நடத்திய பரிசோதனை இனி மனிதர்கள் மீதும் நடத்த தீர்மானிக்க பட்டுள்ளது. 
இந்த முறையில் உடலை நீண்ட நாட்களுக்கு வைத்திருக்க முடியாது. சில மணி நேரத்துக்கு 
மட்டுமே பாதிகபட்டவரை உறைந்த உறக்கத்தில் வைத்திருக்க முடியும். 
என்றாலும் அவசர சிகிச்சைக்கு அந்த நேரமே போதுமானதாகும்..
கீழே கொடுத்துள்ள இணைய முகவரியில் இதைப்பற்றிய இன்னும் ஏராளமான தகவல்கள் உள்ளன.


http://www.newscientist.com/article/mg22129623.000-gunshot-victims-to-be-suspended-between-life-and-death.html



இதன் விளக்கம் வீடியோ வடிவில் கீழே





பழைய தமிழ் திரைப்படம் ஒன்றில் "காயமே இது பொய்யடா. வெறும் காற்றடைத்த பையடாஎன்று ஒரு 
பாடல் உண்டு. அமெரிக்க டாக்டர்கள் அந்த பாட்டை கேட்டு இந்த ஐடியாவ யோசிச்சிருப்பாங்களோ......?

வெள்ளி, ஜூன் 27, 2014

பதில்களை மாற்றிவிடும் கேள்விகள்

ஒரே கேள்விய பல பேரிடம் கேட்கும்போது விதவிதமா பலவிதமா பதில்கள் கிடைப்பதில் ஆச்சரியம் ஏதும் இல்லை. ஆனா ஒரே கேள்விக்கு ஒருவரே பலவிதமா பதில் சொல்வது சிந்திக்க வேண்டிய ஒரு விஷயம். நகைச்சுவை நடிகர் வடிவேலு ஒரு காமெடியில், "அப்போ இருந்து நாங்க நாங்கன்னு சொல்லிட்டிருக்கியே, நீங்க எத்தனை பேருடா இருக்கீங்க?" ன்னு கேட்கும்போது அவர் "யோவ், வெளியில தெரியறது ஒரு ரூபம், ஆனா உள்ள திரியறது பல ரூபங்கள். அதையெல்லாம் வெளியில விட்டா பூமி தாங்காதேன்னு உள்ள ஒரு ஓரமா படுக்கப்போட்டிருக்கோம், அதனாலதான் நாங்க நாங்கன்னு சொல்லிட்டிருக்கோம்" என்று  சொல்லுவார். நெனச்சுப்பாத்தா நமக்குள்ளே பல ரூபங்கள் இருப்பது உண்மைதான்.
இந்த ரூபங்கள் அவரவருடைய வயதையும் அனுபவத்தையும் பொறுத்து
உருவம் கொண்டு வெளிவந்து நடமாடுகிறது. உங்களுக்கு உதாரணம் வேண்டும் என்றால் கீழே உள்ள கேள்வி பதில் பட்டியலை பாருங்க. ஒருவரிடம் கேட்கப்பட்ட கேள்விகளுக்கு அவருடைய பல ரூபங்கள் சொல்லுற வேற வேற பதில்களைப் பாருங்க.

கேள்வி: உங்களுக்கு ரொம்ப பிடித்த நபர் யார்?  
கேள்வி: உங்களுக்கு சுத்தமா பிடிக்காத நபர் யார்?
கேள்வி: உங்கள் வாழ்க்கையின் மிக துன்பமான தருணம் எது?
கேள்வி உங்கள் வாழ்க்கையின் மிக சந்தோஷமான தருணம் எது?
கேள்வி: பிடித்த பொழுது போக்கு என்ன?
கேள்வி: உங்களது மிகப் பெரிய கனவு எது?
கேள்வி: ரொம்பவும் பயப்படும் விஷயம் எது?


பதில்கள் - 10 வயதில்

கேள்வி: உங்களுக்கு ரொம்ப பிடித்த நபர் யார்?
பதில்: அப்பாவும், அம்மாவும் 
கேள்வி: உங்களுக்கு சுத்தமா பிடிக்காத நபர் யார்?
பதில்: கணக்கு டீச்சர் 
கேள்வி: உங்கள் வாழ்க்கையின் மிக துன்பமான தருணம் எது?
பதில்: பரீட்சை தொடங்கிய நாள் 
கேள்வி: உங்கள் வாழ்க்கையின் மிக சந்தோஷமான தருணம் எது?
பதில்: ஸ்கூல் லீவு விட்ட போது 
கேள்வி: பிடித்த பொழுது போக்கு என்ன?
பதில்: பசங்க கூட விளையாடுவது 
கேள்வி: உங்களது மிகப் பெரிய கனவு எது?
பதில்: இப்பவே வளர்ந்து பெரியவனா ஆயிடணும்.
கேள்வி: ரொம்பவும் பயப்படும் விஷயம் எது?
பதில்: கணக்கு பாடம் 

பதில்கள் - 17 வயதில்

கேள்வி: உங்களுக்கு ரொம்ப பிடித்த நபர் யார்?
பதில்: என்னோட நண்பன் ராஜேஷ் 
கேள்வி: உங்களுக்கு சுத்தமா பிடிக்காத நபர் யார்?
பதில்: சதீஷ் 
கேள்வி: உங்கள் வாழ்க்கையின் மிக துன்பமான தருணம் எது?
பதில்: பள்ளிகூடத்தில் நடந்த பிரிவுபசார தினத்தன்று.
கேள்வி உங்கள் வாழ்க்கையின் மிக சந்தோஷமான தருணம் எது?
பதில்: +2 பரீட்சையில் நல்ல மார்க்குடன் பாஸ் பண்ணின போது. 
கேள்வி: பிடித்த பொழுது போக்கு என்ன?
பதில்: FACEBOOK 
கேள்வி: உங்களது மிகப் பெரிய கனவு எது?
பதில்: நல்லா படிக்கணும். நாட்டுக்கு எதாவது நல்லது பண்ணனும். ஊழலை ஒழிக்கணும்.
கேள்வி: ரொம்பவும் பயப்படும் விஷயம் எது?
பதில்: நமது சமுதாயம் அலட்சியத்துடன் இருப்பது

பதில்கள் - 18 வயதில்

கேள்வி: உங்களுக்கு ரொம்ப பிடித்த நபர் யார்?
பதில்: சுபாஷினி......இல்லை இல்லை ராஜேஷ்
கேள்வி: உங்களுக்கு சுத்தமா பிடிக்காத நபர் யார்?
பதில்: அப்படியெல்லாம் இல்லை எல்லாரையும் பிடிக்கும்.
கேள்வி: உங்கள் வாழ்க்கையின் மிக துன்பமான தருணம் எது?
பதில்: விடுமுறையில் உள்ள கல்லூரி நாட்கள்.  
கேள்வி உங்கள் வாழ்க்கையின் மிக சந்தோஷமான தருணம் எது?
பதில்: சுபாஷினி என்கிட்டே முதல் முதலா பேசினப்ப
கேள்வி: பிடித்த பொழுது போக்கு என்ன?
பதில்: சாட்டிங் 
கேள்வி: உங்களது மிகப் பெரிய கனவு எது?
பதில்: நல்ல வேலையில் சேரவேண்டும் 
கேள்வி: ரொம்பவும் பயப்படும் விஷயம் எது?
பதில்: சந்தேகமே வேணா....பரீட்சையேதான்.

பதில்கள் - 22 வயதில்

கேள்வி: உங்களுக்கு ரொம்ப பிடித்த நபர் யார்?
பதில்: சுபாஷினி 
கேள்வி: உங்களுக்கு சுத்தமா பிடிக்காத நபர் யார்?
பதில்: அவளோட அப்பா 
கேள்வி: உங்கள் வாழ்க்கையின் மிக துன்பமான தருணம் எது?
பதில்: வேலை கிடைத்து சுபாஷினியை பிரிந்து ஹைதராபாத் போனபோது
கேள்வி உங்கள் வாழ்க்கையின் மிக சந்தோஷமான தருணம் எது?
பதில்: சுபாஷினி சம்மதம்னு சொன்ன போது
கேள்வி: பிடித்த பொழுது போக்கு என்ன?
பதில்: சுபாஷினியோட கூட இருக்கணும்.
கேள்வி: உங்களது மிகப் பெரிய கனவு எது?
பதில்: சுபாஷினியை திருமணம் செய்வது 
கேள்வி: ரொம்பவும் பயப்படும் விஷயம் எது?
பதில்: அப்படியெல்லாம் எதுவுமே இல்லை 

பதில்கள் - 26 வயதில்

கேள்வி: உங்களுக்கு ரொம்ப பிடித்த நபர் யார்?
பதில்: ராஜேஷ் 
கேள்வி: உங்களுக்கு சுத்தமா பிடிக்காத நபர் யார்?
பதில்: சுபாஷினி 
கேள்வி: உங்கள் வாழ்க்கையின் மிக துன்பமான தருணம் எது?
பதில்: அதை ஞாபகப்படுத்தாதீங்க. பிளீஸ் 
கேள்வி: உங்கள் வாழ்க்கையின் மிக சந்தோஷமான தருணம் எது?
பதில்: அப்படியெல்லாம் எதுவும் இல்லை
கேள்வி: பிடித்த பொழுது போக்கு என்ன?
பதில்: ஏதாவது செய்தபடி இருக்கணும். சும்மா இருந்தா ஒண்ணொண்ணா ஞாபகம் வந்துண்டே இருக்கும்.
கேள்வி: உங்களது மிகப் பெரிய கனவு எது?
பதில்: ஒரு கனவும் இல்லை. எல்லாம் கலைந்துவிட்டது 
கேள்வி: ரொம்பவும் பயப்படும் விஷயம் எது?
பதில்: இன்னொரு தடவை காதல் / கல்யாணம் 

பதில்கள் - 28 வயதில்

கேள்வி: உங்களுக்கு ரொம்ப பிடித்த நபர் யார்?
பதில்: அம்மா 
கேள்வி: உங்களுக்கு சுத்தமா பிடிக்காத நபர் யார்?
பதில்: ஆபீசில் கூட வேலை செய்யும் பிரதீப் 
கேள்வி: உங்கள் வாழ்க்கையின் மிக துன்பமான தருணம் எது?
பதில்: அப்பாவோட மரணம் 
கேள்வி: உங்கள் வாழ்க்கையின் மிக சந்தோஷமான தருணம் எது?
பதில்: வேலை கிடைத்தபோது 
கேள்வி: பிடித்த பொழுது போக்கு என்ன?
பதில்: ஓவர் டைம் வேலை செய்வது 
கேள்வி: உங்களது மிகப் பெரிய கனவு எது?
பதில்: கொஞ்சம் பணம் காசு சேர்க்க வேண்டும் 
கேள்வி: ரொம்பவும் பயப்படும் விஷயம் எது?
பதில்: எதிர்கால வாழ்க்கைதான் 

பதில்கள் - 38 வயதில்

கேள்வி: உங்களுக்கு ரொம்ப பிடித்த நபர் யார்?
பதில்: என் மகன் அம்ருத் 
கேள்வி: உங்களுக்கு சுத்தமா பிடிக்காத நபர் யார்?
பதில்: என்னோட ஆபீஸ் மேனேஜர் 
கேள்வி: உங்கள் வாழ்க்கையின் மிக துன்பமான தருணம் எது?
பதில்: ஆபீசில லீவு கேட்டு கிடைக்காதபோது 
கேள்வி: உங்கள் வாழ்க்கையின் மிக சந்தோஷமான தருணம் எது?
பதில்: சம்பளம் வாங்கும்போது 
கேள்வி: பிடித்த பொழுது போக்கு என்ன?
பதில்: மனைவி மற்றும் குழந்தைகளுடன் இருப்பது  
கேள்வி: உங்களது மிகப் பெரிய கனவு எது?
பதில்: குழந்தைகளின் எதிர்காலம் 
கேள்வி: ரொம்பவும் பயப்படும் விஷயம் எது?
பதில்: விலையேற்றம் 

பதில்கள் - 59 வயதில்

கேள்வி: உங்களுக்கு ரொம்ப பிடித்த நபர் யார்?
பதில்: என் பேத்தி சுவேதா  
கேள்வி: உங்களுக்கு சுத்தமா பிடிக்காத நபர் யார்?
பதில்: என் மகனோட மனைவி  
கேள்வி: உங்கள் வாழ்க்கையின் மிக துன்பமான தருணம் எது?
பதில்: வேலையிலிருந்து ஒய்வு பெற்ற நாள். 
கேள்வி: உங்கள் வாழ்க்கையின் மிக சந்தோஷமான தருணம் எது?
பதில்: பேத்தி சுவேதா பிறந்த போது  
கேள்வி: பிடித்த பொழுது போக்கு என்ன?
பதில்: இப்போ செய்வது எல்லாமே பொழுத போக்கறதுக்குத்தானே 
கேள்வி: உங்களது மிகப் பெரிய கனவு எது?
பதில்: யாருக்கும் தொல்லை கொடுக்காம போயி சேரணும்.
கேள்வி: ரொம்பவும் பயப்படும் விஷயம் எது?
பதில்: மகனுக்கு ஜாதகதோஷம் நெறைய இருக்கு. ஆனா அவனுக்கு இதிலெல்லாம் சுத்தமா நம்பிக்கையே இல்லை. அதை நினைசாதான் பயமா இருக்கு