வெள்ளி, ஜூன் 27, 2014

பதில்களை மாற்றிவிடும் கேள்விகள்

ஒரே கேள்விய பல பேரிடம் கேட்கும்போது விதவிதமா பலவிதமா பதில்கள் கிடைப்பதில் ஆச்சரியம் ஏதும் இல்லை. ஆனா ஒரே கேள்விக்கு ஒருவரே பலவிதமா பதில் சொல்வது சிந்திக்க வேண்டிய ஒரு விஷயம். நகைச்சுவை நடிகர் வடிவேலு ஒரு காமெடியில், "அப்போ இருந்து நாங்க நாங்கன்னு சொல்லிட்டிருக்கியே, நீங்க எத்தனை பேருடா இருக்கீங்க?" ன்னு கேட்கும்போது அவர் "யோவ், வெளியில தெரியறது ஒரு ரூபம், ஆனா உள்ள திரியறது பல ரூபங்கள். அதையெல்லாம் வெளியில விட்டா பூமி தாங்காதேன்னு உள்ள ஒரு ஓரமா படுக்கப்போட்டிருக்கோம், அதனாலதான் நாங்க நாங்கன்னு சொல்லிட்டிருக்கோம்" என்று  சொல்லுவார். நெனச்சுப்பாத்தா நமக்குள்ளே பல ரூபங்கள் இருப்பது உண்மைதான்.
இந்த ரூபங்கள் அவரவருடைய வயதையும் அனுபவத்தையும் பொறுத்து
உருவம் கொண்டு வெளிவந்து நடமாடுகிறது. உங்களுக்கு உதாரணம் வேண்டும் என்றால் கீழே உள்ள கேள்வி பதில் பட்டியலை பாருங்க. ஒருவரிடம் கேட்கப்பட்ட கேள்விகளுக்கு அவருடைய பல ரூபங்கள் சொல்லுற வேற வேற பதில்களைப் பாருங்க.

கேள்வி: உங்களுக்கு ரொம்ப பிடித்த நபர் யார்?  
கேள்வி: உங்களுக்கு சுத்தமா பிடிக்காத நபர் யார்?
கேள்வி: உங்கள் வாழ்க்கையின் மிக துன்பமான தருணம் எது?
கேள்வி உங்கள் வாழ்க்கையின் மிக சந்தோஷமான தருணம் எது?
கேள்வி: பிடித்த பொழுது போக்கு என்ன?
கேள்வி: உங்களது மிகப் பெரிய கனவு எது?
கேள்வி: ரொம்பவும் பயப்படும் விஷயம் எது?


பதில்கள் - 10 வயதில்

கேள்வி: உங்களுக்கு ரொம்ப பிடித்த நபர் யார்?
பதில்: அப்பாவும், அம்மாவும் 
கேள்வி: உங்களுக்கு சுத்தமா பிடிக்காத நபர் யார்?
பதில்: கணக்கு டீச்சர் 
கேள்வி: உங்கள் வாழ்க்கையின் மிக துன்பமான தருணம் எது?
பதில்: பரீட்சை தொடங்கிய நாள் 
கேள்வி: உங்கள் வாழ்க்கையின் மிக சந்தோஷமான தருணம் எது?
பதில்: ஸ்கூல் லீவு விட்ட போது 
கேள்வி: பிடித்த பொழுது போக்கு என்ன?
பதில்: பசங்க கூட விளையாடுவது 
கேள்வி: உங்களது மிகப் பெரிய கனவு எது?
பதில்: இப்பவே வளர்ந்து பெரியவனா ஆயிடணும்.
கேள்வி: ரொம்பவும் பயப்படும் விஷயம் எது?
பதில்: கணக்கு பாடம் 

பதில்கள் - 17 வயதில்

கேள்வி: உங்களுக்கு ரொம்ப பிடித்த நபர் யார்?
பதில்: என்னோட நண்பன் ராஜேஷ் 
கேள்வி: உங்களுக்கு சுத்தமா பிடிக்காத நபர் யார்?
பதில்: சதீஷ் 
கேள்வி: உங்கள் வாழ்க்கையின் மிக துன்பமான தருணம் எது?
பதில்: பள்ளிகூடத்தில் நடந்த பிரிவுபசார தினத்தன்று.
கேள்வி உங்கள் வாழ்க்கையின் மிக சந்தோஷமான தருணம் எது?
பதில்: +2 பரீட்சையில் நல்ல மார்க்குடன் பாஸ் பண்ணின போது. 
கேள்வி: பிடித்த பொழுது போக்கு என்ன?
பதில்: FACEBOOK 
கேள்வி: உங்களது மிகப் பெரிய கனவு எது?
பதில்: நல்லா படிக்கணும். நாட்டுக்கு எதாவது நல்லது பண்ணனும். ஊழலை ஒழிக்கணும்.
கேள்வி: ரொம்பவும் பயப்படும் விஷயம் எது?
பதில்: நமது சமுதாயம் அலட்சியத்துடன் இருப்பது

பதில்கள் - 18 வயதில்

கேள்வி: உங்களுக்கு ரொம்ப பிடித்த நபர் யார்?
பதில்: சுபாஷினி......இல்லை இல்லை ராஜேஷ்
கேள்வி: உங்களுக்கு சுத்தமா பிடிக்காத நபர் யார்?
பதில்: அப்படியெல்லாம் இல்லை எல்லாரையும் பிடிக்கும்.
கேள்வி: உங்கள் வாழ்க்கையின் மிக துன்பமான தருணம் எது?
பதில்: விடுமுறையில் உள்ள கல்லூரி நாட்கள்.  
கேள்வி உங்கள் வாழ்க்கையின் மிக சந்தோஷமான தருணம் எது?
பதில்: சுபாஷினி என்கிட்டே முதல் முதலா பேசினப்ப
கேள்வி: பிடித்த பொழுது போக்கு என்ன?
பதில்: சாட்டிங் 
கேள்வி: உங்களது மிகப் பெரிய கனவு எது?
பதில்: நல்ல வேலையில் சேரவேண்டும் 
கேள்வி: ரொம்பவும் பயப்படும் விஷயம் எது?
பதில்: சந்தேகமே வேணா....பரீட்சையேதான்.

பதில்கள் - 22 வயதில்

கேள்வி: உங்களுக்கு ரொம்ப பிடித்த நபர் யார்?
பதில்: சுபாஷினி 
கேள்வி: உங்களுக்கு சுத்தமா பிடிக்காத நபர் யார்?
பதில்: அவளோட அப்பா 
கேள்வி: உங்கள் வாழ்க்கையின் மிக துன்பமான தருணம் எது?
பதில்: வேலை கிடைத்து சுபாஷினியை பிரிந்து ஹைதராபாத் போனபோது
கேள்வி உங்கள் வாழ்க்கையின் மிக சந்தோஷமான தருணம் எது?
பதில்: சுபாஷினி சம்மதம்னு சொன்ன போது
கேள்வி: பிடித்த பொழுது போக்கு என்ன?
பதில்: சுபாஷினியோட கூட இருக்கணும்.
கேள்வி: உங்களது மிகப் பெரிய கனவு எது?
பதில்: சுபாஷினியை திருமணம் செய்வது 
கேள்வி: ரொம்பவும் பயப்படும் விஷயம் எது?
பதில்: அப்படியெல்லாம் எதுவுமே இல்லை 

பதில்கள் - 26 வயதில்

கேள்வி: உங்களுக்கு ரொம்ப பிடித்த நபர் யார்?
பதில்: ராஜேஷ் 
கேள்வி: உங்களுக்கு சுத்தமா பிடிக்காத நபர் யார்?
பதில்: சுபாஷினி 
கேள்வி: உங்கள் வாழ்க்கையின் மிக துன்பமான தருணம் எது?
பதில்: அதை ஞாபகப்படுத்தாதீங்க. பிளீஸ் 
கேள்வி: உங்கள் வாழ்க்கையின் மிக சந்தோஷமான தருணம் எது?
பதில்: அப்படியெல்லாம் எதுவும் இல்லை
கேள்வி: பிடித்த பொழுது போக்கு என்ன?
பதில்: ஏதாவது செய்தபடி இருக்கணும். சும்மா இருந்தா ஒண்ணொண்ணா ஞாபகம் வந்துண்டே இருக்கும்.
கேள்வி: உங்களது மிகப் பெரிய கனவு எது?
பதில்: ஒரு கனவும் இல்லை. எல்லாம் கலைந்துவிட்டது 
கேள்வி: ரொம்பவும் பயப்படும் விஷயம் எது?
பதில்: இன்னொரு தடவை காதல் / கல்யாணம் 

பதில்கள் - 28 வயதில்

கேள்வி: உங்களுக்கு ரொம்ப பிடித்த நபர் யார்?
பதில்: அம்மா 
கேள்வி: உங்களுக்கு சுத்தமா பிடிக்காத நபர் யார்?
பதில்: ஆபீசில் கூட வேலை செய்யும் பிரதீப் 
கேள்வி: உங்கள் வாழ்க்கையின் மிக துன்பமான தருணம் எது?
பதில்: அப்பாவோட மரணம் 
கேள்வி: உங்கள் வாழ்க்கையின் மிக சந்தோஷமான தருணம் எது?
பதில்: வேலை கிடைத்தபோது 
கேள்வி: பிடித்த பொழுது போக்கு என்ன?
பதில்: ஓவர் டைம் வேலை செய்வது 
கேள்வி: உங்களது மிகப் பெரிய கனவு எது?
பதில்: கொஞ்சம் பணம் காசு சேர்க்க வேண்டும் 
கேள்வி: ரொம்பவும் பயப்படும் விஷயம் எது?
பதில்: எதிர்கால வாழ்க்கைதான் 

பதில்கள் - 38 வயதில்

கேள்வி: உங்களுக்கு ரொம்ப பிடித்த நபர் யார்?
பதில்: என் மகன் அம்ருத் 
கேள்வி: உங்களுக்கு சுத்தமா பிடிக்காத நபர் யார்?
பதில்: என்னோட ஆபீஸ் மேனேஜர் 
கேள்வி: உங்கள் வாழ்க்கையின் மிக துன்பமான தருணம் எது?
பதில்: ஆபீசில லீவு கேட்டு கிடைக்காதபோது 
கேள்வி: உங்கள் வாழ்க்கையின் மிக சந்தோஷமான தருணம் எது?
பதில்: சம்பளம் வாங்கும்போது 
கேள்வி: பிடித்த பொழுது போக்கு என்ன?
பதில்: மனைவி மற்றும் குழந்தைகளுடன் இருப்பது  
கேள்வி: உங்களது மிகப் பெரிய கனவு எது?
பதில்: குழந்தைகளின் எதிர்காலம் 
கேள்வி: ரொம்பவும் பயப்படும் விஷயம் எது?
பதில்: விலையேற்றம் 

பதில்கள் - 59 வயதில்

கேள்வி: உங்களுக்கு ரொம்ப பிடித்த நபர் யார்?
பதில்: என் பேத்தி சுவேதா  
கேள்வி: உங்களுக்கு சுத்தமா பிடிக்காத நபர் யார்?
பதில்: என் மகனோட மனைவி  
கேள்வி: உங்கள் வாழ்க்கையின் மிக துன்பமான தருணம் எது?
பதில்: வேலையிலிருந்து ஒய்வு பெற்ற நாள். 
கேள்வி: உங்கள் வாழ்க்கையின் மிக சந்தோஷமான தருணம் எது?
பதில்: பேத்தி சுவேதா பிறந்த போது  
கேள்வி: பிடித்த பொழுது போக்கு என்ன?
பதில்: இப்போ செய்வது எல்லாமே பொழுத போக்கறதுக்குத்தானே 
கேள்வி: உங்களது மிகப் பெரிய கனவு எது?
பதில்: யாருக்கும் தொல்லை கொடுக்காம போயி சேரணும்.
கேள்வி: ரொம்பவும் பயப்படும் விஷயம் எது?
பதில்: மகனுக்கு ஜாதகதோஷம் நெறைய இருக்கு. ஆனா அவனுக்கு இதிலெல்லாம் சுத்தமா நம்பிக்கையே இல்லை. அதை நினைசாதான் பயமா இருக்கு 

3 கருத்துகள்:

உங்கள் கருத்துக்கள் வரவேற்கப்படுகிறது