வெள்ளி, செப்டம்பர் 05, 2014

அரசியல்ல இதெல்லாம் சாதாரணமப்பா

இந்த 100 நாட்களில் பிரதமர் மோடியின் ஆட்சியில் எனக்கு பிடித்தது என்ன என்று ஒரு கேள்வி.

விசுAwesomeமின்துணிக்கைகள் வலைப்பதிவில் இந்த கேள்வியை கேட்டு என்னை தொடர் பதிவெழுத அழைத்தவுடன் ரொம்ப நேரம் யோசனை செய்யாமல் எழுதிய பதில்கள் இவை. அரசியல் பற்றி பேச எழுத எதுக்குங்க யோசனையெல்லாம் பண்ணி நேரத்த வேஸ்ட் பண்ணனும். சரி இப்ப பதில்களைப் படிங்க

1. திட்டக் கமிஷனைக் கலைத்தது. (ஆளே இல்லாத கடையில இன்னும் யாருக்குப்பா டீ ஆட்டிகினு இருக்கே)

2. தமிழக கட்சிகளைப் போலல்லாமல் முந்தைய அரசின் நல்ல திட்டங்களை முடக்காமல் தொடர்ந்து நடத்துவது

3. காங்கிரஸ் கட்சித் தலைமைக்கு கட்சியின் தவறுகளை உணர்ந்து தங்களை திருத்திக் கொள்ள ஒரு வாய்ப்பு அளித்தது (திருத்தி கொண்டார்களான்னு கேட்கக்கூடாது).

4. மக்களின் வரிப்பணத்தை வீணாக்கும் விதத்தில் மக்களவை அடிதடிக் கலவரங்கள் ஒத்திவைப்புகள் எதுவும் இல்லாம இந்த 100 நாளும் நடத்தி முடித்தது. இதற்கு முக்கிய காரணம் முந்தய காங்கிரஸ் கட்சியில் இருந்த மந்திரிகள் ஆளாளுக்கு ஒரு கோஷ்டியா தனி தனி அரசாங்கமா செயல் பட்டாங்க. மோடியின் மந்திரிசபை இன்னும் (இந்த 100 நாளில்) அந்த நிலையை அடையவில்லை

5. எல்லாத்துக்கும் மேல தலைநகர் டெல்லியில் ஒரு அரசாங்கம் நடந்து கொண்டிருக்கிறது என்பதை மக்களுக்கு மறந்துவிடாமல் இருக்கச் செய்வது

//// இந்த கேள்விக்கு நான் மட்டும் பதில் அளிக்காமல் எனக்கு தெரிந்த மற்றும் ஒரு ஐந்து பதிவர்களிடமும் வைக்கின்றேன். இந்த பதிவர்களும் , இதற்க்கு பதில் கூறிவிட்டு, அவர்களுக்கு அறிமுகமான 5 பதிவர்களுக்கு இந்த கேள்வியை கேட்டு வைக்குமாறு தயவு கூறி கேட்டு கொள்கிறேன். ////

ஒரு கேள்விக்கு எதுக்கு 5 பதில்ன்னு கேக்குறீங்களா.....? அது ஒண்ணுமில்லீங்க. எனக்கு அறிமுகமான பதிவர்களை அரசியல் கேள்வி கேட்டு தொல்லை தர விருப்பமில்லாததால் 5 பதில்களையும் நானே அளித்துள்ளேன்.

இதெல்லாம் நாளைக்கு வரலாறுல வரும். பசங்க பாடத்துல படிப்பாங்க. நமக்கு சிலை வைப்பாங்க. அரசியல்ல இதெல்லாம் சாதாரணமப்பா

 

சனி, ஆகஸ்ட் 30, 2014

ஓவியமா அல்லது ஓவியனா....?












 




தீபாவளித் திருநாளை முன்னிட்டு
ரூபன்&யாழ்பாவாணன் இணைந்து நடாத்தும்
உலகம் தழுவிய மாபெரும் கவிதைப் போட்டி-2014



ஓவியமா அல்லது ஓவியனா....?

வண்ணமயமான, வல்லமையான
சாந்தமான, சாமர்த்தியமான 
பவித்ரமான, பண்பட்ட
தெய்வீகமான, திறமையான 
அமைதியான, அர்பணிப்பான 
கண்ணைக்கவரும், கைவண்ணமிகுந்த
ரசிக்கும்படியான, ரசனைமிகுந்த 
ஐஸ்வர்யமான, ஆச்சரியமான
சீர்மிகுந்த, மிகச்சிறந்த
அம்சமான, தனித்துவமான
மதிமயக்கும், ஒழுக்கமான
சுண்டியிழுக்கும், சொக்கவைக்கும்
வசீகரமான,  கட்டுகோப்பான
சௌந்தர்யமான, நுணுக்கமான 
சொக்கவைக்கும், வியக்கவைக்கும்
பேரழகான, பேரறிவான 
அச்சினில்வார்த்த, ஆத்மார்த்தமான
நேர்த்தியான ஓவியம், கீர்த்திமிகுந்த ஓவியன்

வெற்றிபெறப் போவது யார்..?

ஓவியமா அல்லது ஓவியனா....?


ஞாயிறு, ஆகஸ்ட் 24, 2014

நால்வகை அறிவு


தீபாவளித் திருநாளை முன்னிட்டு
ரூபன்&யாழ்பாவாணன் இணைந்து நடாத்தும்
உலகம் தழுவிய மாபெரும் கவிதைப் போட்டி-2014





நால்வகை அறிவு



அறிவார் அறிவாரென அறிவார்அவ்
வறிஞரை குருவெனப் பெறுவாய் 

அறிவார் அறிவாரென அறியார் – அவ்
வசடன்கண் திறந்திட துணைவாய்

அறியார் அறியாதென அறிவார் – அப்
பாமரன் அறிந்திட பயிற்றுவாய்

அறியார் அறியவும் விரும்பார் – அம்
மடையனை நெருங்கா தகல்வாய்

சனி, ஆகஸ்ட் 16, 2014

மாஆ................த்தி சூடி

 = எழுத்துக்கெல்லாம் முதன்மை என்ற சிறப்பை விட "அம்மா" என்ற சொல்லுக்கு முதலில் இருப்பதுதானே இதன் பெருமை

= அடிபடும் போதும் சரி ஆச்சரியப்படும் போதும் சரி என்னை மறக்காதே

= உனக்கு முதன் முதலில் கோலம் போட சொல்லி கொடுத்தது நான்தானே

 = "பல்லை இளித்தல்" என்பதை "பல்லை ஈளித்தல்" என்று  மாற்றி சொன்னால் தவறில்லை என்று நினைக்கிறேன்

= கரும்பலகையின் உச்சியில் " " என்று  எழுதியபின் அகரம் தான் முதலெழுத்து என்று வாத்தியார் பாடத்தை தொடங்கினார்.

 = பிறந்த குழந்தை சுவாசம் தொடங்க முகத்தில் "ஊ" என ஊதி உயிர்கொடுத்து வாழ்ந்து முடிக்கையில் சங்கெடுத்து "ஊ" என ஊதி வழியனுப்புகிறோம்

 = என்னுடையது என்பது எங்களுடையது என மாற்றும் நாள் வந்தால் நல்லது

 = "ஏன்" என பிறரிடம் கேட்பது அதிகாரம், ஆணவம் அல்லது அறியாமை. அதையே நீ உன்னிடம் கேட்பது ஞானம், அடக்கம், ஆன்மீகம்,

 = ஐவருக்கு மனைவியான திரௌபதி கர்ணனை பற்றி விசாரிக்க பஞ்ச பாண்டவர்கள் அதிர்ந்தனர்.

 = தலைக்கவிழ்ந்தால் மதிப்புக் குறைந்திடுமே என தலையை உயர்த்தி பிடித்தபடி நிமிர்ந்து நின்றது "ஒன்பது"

 = தேர்தலில் ஓட்டைப் பிரிக்க புதிதாய் முளைத்த கட்சியின் தலைவருக்கு இதற்கு முன் (வீட்டுக் கூரை) ஓட்டை பிரிப்பதுதான் தொழிலாம்.

 = இது ஓரெழுத்து "இரட்டைக் கிளவி" பிரிச்சா போச்சு.

ஃ  =   மூன்று கண்ணுடைய தெய்வத்தை கைகூப்பி வணங்குபவன் மூன்று கண்ணுடைய என்னை வெட்டிக் கொல்கிறானே என தேங்காய் புகார் சொல்லியது

 

வெள்ளி, ஆகஸ்ட் 15, 2014

காண்போர் சொல்வீரோ.....?





1947 இல்
இந்தியாவில்
ஒரு உத்தமர்
இருந்தார்.
இன்று
நோட்டுல
மட்டுமே இருக்கார்.
நாட்டுல
எங்கும் காணோம்.





அனைவருக்கும் எனது இனிய சுதந்திர தின நல்வாழ்துக்கள் 

திங்கள், ஜூலை 21, 2014

திரையில் ரசித்த மாடிப்படிகள் - 2

என்னைப் போலவே இந்த படத்தோட இயக்குனருக்கும் மாடிப்படின்னா ரொம்ப பிடிக்கும் என்று நினைக்கிறேன். பாருங்களேன், பாட்டு தொடங்கி முடியும்வரை அந்த அழகான மாடிப்படியிலேயே படம் பிடித்திருக்காங்க. கதாநாயகி மாடிப்படியிலேயே ஆடவும் செய்றாங்க.




 

ஞாயிறு, ஜூலை 20, 2014

உறைந்த உறக்கம்

இணையத்தில் படித்த ஒரு நகைச்சுவை.ஒரு பிரபல இருதய அறுவை சிகிச்சை மருத்துவர், பழுதுபார்க்க கொடுத்திருந்த தனது வாகனத்தை திருப்பி எடுப்பதற்காக மெக்கானிக் ஷெட்டுக்கு வந்திருந்தார்.அவரை அடையாளம்கண்டவுடன்  அங்கிருந்த ஒரு  மெக்கானிக் அவரிடம்  சென்று "டாக்டர் நான் உங்களிடம் ஒரு கேள்வி கேட்கலாமா? என்றான். சற்றே ஆச்சரியத்துடன் டாக்டர் சம்மதித்தார். அவன் உடனே "இங்க இருக்கும் வண்டிகளில் உள்ள எஞ்சினும் மனிதனின் இதயம் போன்றதுதான்.இதயத்தை கிழித்து ரத்தக்குழாய்களின் அடைப்பை  நீக்கி,தேவைப்பட்டால் வெட்டி நீக்கி தையலிட்டு இணைத்து அதை மீண்டும் ஒரு  புதிய இதயம் போல்  நீங்கள் இயங்க செய்கிறீகள்.நானும் அதேபோல் என்ஜினில் பழுதடைந்த உதிரிபாகங்களை மாற்றி  பொருத்தி  புதிய  எஞ்சின் போல மாற்றுகிறேன். நீங்களும் நானும் ஏறக்குறைய ஒரே வேலையை  செய்தாலும் நீங்கள் என்னைவிட அதிகம் பணம் வாங்குகிறீர்களே இது நியாயமா..?" என்று கேட்டான். டாக்டர் பொறுமையாக அவன் அருகில் வந்து, நீ சொல்வதெல்லாம் சரி தம்பி, ஆனால் எஞ்சின் இயங்கிக்கொண்டிருக்கும் போதே உன்னால் இந்த வேலைகளை செய்யமுடியுமா?" என்று கேட்டார்டாக்டரின் பதிலில் பொதிந்திருந்த உண்மையை  உணர்ந்த  மெக்கானிக்   தலையை குனிந்தான். 

இனி விஷயத்துக்கு வருவோம். இருதயம் துடிப்பை நிறுத்துகிறது. மூளை வேலையை நிறுத்துகிறது. உடம்பில் ஒரு சொட்டு இரத்தம்கூட மிச்சமில்லை.  பதிலாக இரத்த குழாய்களில்,தமனிகளில்  குளிர்ந்த  உப்புநீர் நிறைந்து நிற்கிறது. மருத்துவ சொல்லாடலில் இந்த நிலையினை மரணம் என்று சொல்லுவர். ஆனால் நவீன மருத்துவம் இதனை உறைநிலை உறக்கம் என்று சொல்கிறது. உயிருக்கு சற்று நேரம் மட்டும் ஒய்வு. சில மணி நேரத்திற்கு பின் தமனிகளில் உள்ளஉப்புநீரை வெளியேற்றி மீண்டும் இரத்தத்தை செலுத்திய பின்  இதயம் மீண்டும் துடிக்க தொடங்குகிறது. மூளை தன் வேலைகளை  தொடர்கிறது.ஆழ்ந்த உறக்கத்தில் இருக்கும் மனிதனுக்குள் உயிர்வந்து குடிகொள்கிறது. 

என்ன இதெல்லாம்...? ஏதாவது விட்டலாச்சாரியார் படம் பாத்துட்டு பதிவு எழுதுரீங்களான்னு கேட்காதீங்க. 
இது சாத்தியமாகும் நாள் தொலைவில் இல்லை. அறிவியல் சார்ந்த கற்பனை கதைகளில் மட்டுமே நாம் 
படித்து வந்த, நூறு சதவிகிதமும் சுத்தமான பொய் என்று தோன்றும் இந்த மருத்துவ சிகிச்சை முறையில் 
மனிதர்களுக்கு சிகிச்சை அளிக்க மருத்துவ உலகம் தயாராகி விட்டது. 
எமர்ஜென்சி பிரசர்வேஷன் & ரீசஸிட்டேஷன் என்ற பெயருடைய இந்த சிகிச்சை முறை விபத்தில் 
டுகாயம் அடைபவர்களும் மாரடைப்பு நோயாளிகளுக்கும் அவசர சிகிச்சை வேண்டுபவர்களும் 
எதிர்பார்க்கும் புதிய வழி சிகிச்சையாகும். மிருகங்களில் நடத்திய சோதனைகளில் இந்த சிகிச்சை 
முறை 90 சதவிகிதம் வெற்றியடைந்துள்ளது.

ஒரு விபத்தில் படுகாயமடைந்த அல்லது மாரடைப்பு ஏற்பட்ட ஒருவருக்கு எவ்வளவு விரைவாக 

மருத்துவ சிகிச்சை கிடைக்கிறதோ அந்த அளவு அவரது உயிருக்கு ஆபத்தும் குறைகிறது. நேரம் 
அதிகரிக்க அதிகரிக்க உயிர்பிழைக்கும் வாய்ப்பு குறைகிறது. விபத்தில் ஏற்படும் இரத்த இழப்பு, 
கை, கால் எலும்பு முறிவுகள் ஏற்படுவதுடன் உள் அவயங்களான ஈரல், சிறுநீரகம் போன்றவையும் 
சில சமயம் பாதிப்படையலாம். இங்கு சிகிச்சைக்கான நேரம் மிக முக்கியம். துரதிஷ்டவசமாக 
விபத்தில் சிக்கியவருக்கு அது கிடைப்பதில்லை..அதற்கு சரியான தீர்வுதான் இந்த 
"உறைந்த உறக்க" சிகிச்சை முறை. 

விபத்து நடந்தவுடன் விபத்தில் சிக்கியவருக்கு எற்படும் காயம் மற்றும் இரத்த இழப்பினை கருத்தில் 
கொண்டு அவரது உடலில் இருந்து இரத்தத்தை நீக்கி குளிர்ந்த உப்பு நீரை ஏற்றியபின் சிகிச்சை 
தொடங்குகிறதுஉப்பு நீரை எற்றியபின் உடலின் வெப்பநிலை 20 டிகிரியாக குறைகிறது. உடனடியாக 
மூளையும், இருதயமும் அமைதியாக தத்தமது வேலைகளை நிறுத்தி வைக்கிறது. உடலுக்கு 
தேவைப்படும் ஆக்சிஜன் அளவு வெகுவாக குறைகிறது. மருத்துவ அறிவியலின்படி 
ஆளு “டிக்கெட் வாங்கிட்டாரு”. இந்த சமயத்தில் உடலில் ஏற்பட்ட காயங்களில் தையல் போடுவது 
மற்றும் அறுவை சிகிச்சைகள் செய்வது போன்ற வேலைகள் நடக்கும். இந்த சமயத்தில் என்ன 
செய்தாலும் உடல் சலனமில்லாமல் இருக்கும். எல்லாம் முடித்த பிறகு உப்பு நீரை வெளியெற்றி 
மீண்டும் இரத்தம் ஏற்றப்படும். இருதயம் மீண்டும் துடிக்கத் தொடங்கும். மூளை வேலை செய்ய தொடங்கும். 
இடைவேளை முடிந்து திரைப்படம் தொடங்குவது போல் உயிர் மீண்டும் உடலுக்கு திரும்பிவரும். 

இந்தமாதம் அமெரிக்காவில் பென்சில்வானியாவில் உள்ள யூனிவெர்சிட்டி ஆப் பிட்ஸ்பர்க் மெடிக்கல் 
சென்டரில் Dr.சாமுவேல் டிஷ்மான் தலைமையில் மருத்துவர்கள் விபத்தில் சிக்கி அவசர சிகிச்சை 
தேவைப்படும் 10 நபர்களுக்கு சோதனை அடிப்படையில் இந்த சிகிச்சையினை கையாளப் போகின்றனர். 
14 ஆண்டுகளுக்கு முன் Dr.பீட்டர் ரீ கண்டுபிடித்த இந்த வித்தை எலிகள் மற்றும் பன்றிகள் மீது 
வெற்றிகரமாக நடத்திய பரிசோதனை இனி மனிதர்கள் மீதும் நடத்த தீர்மானிக்க பட்டுள்ளது. 
இந்த முறையில் உடலை நீண்ட நாட்களுக்கு வைத்திருக்க முடியாது. சில மணி நேரத்துக்கு 
மட்டுமே பாதிகபட்டவரை உறைந்த உறக்கத்தில் வைத்திருக்க முடியும். 
என்றாலும் அவசர சிகிச்சைக்கு அந்த நேரமே போதுமானதாகும்..
கீழே கொடுத்துள்ள இணைய முகவரியில் இதைப்பற்றிய இன்னும் ஏராளமான தகவல்கள் உள்ளன.


http://www.newscientist.com/article/mg22129623.000-gunshot-victims-to-be-suspended-between-life-and-death.html



இதன் விளக்கம் வீடியோ வடிவில் கீழே





பழைய தமிழ் திரைப்படம் ஒன்றில் "காயமே இது பொய்யடா. வெறும் காற்றடைத்த பையடாஎன்று ஒரு 
பாடல் உண்டு. அமெரிக்க டாக்டர்கள் அந்த பாட்டை கேட்டு இந்த ஐடியாவ யோசிச்சிருப்பாங்களோ......?