புதன், மார்ச் 12, 2014

பாசவலை

ஆதரவின்மை என்ற துன்பச் சிறையுண்டு
அதனைக்கண்டு கலங்கும் மனமுண்டு 
கண்ணீர் விட்டு கதறி அழுவதை பார்க்கும்போது
கொஞ்சமாவது கண்கலங்க தோன்றுகின்றது 
துக்கம் புயலென தாக்கும்போது 
நெஞ்சு விம்மி வலிக்கின்றது.
நினைவுகளில் மட்டுமே இனி என்பதை மறந்து 
திரும்பிவர எத்தனிக்கையில் 
கொழுந்துவிட்டு எரியும் தீ தடுக்கின்றது 
மறந்திடுவாயோ என்றெண்ணும்போது 
உடலைவிட அதிகமாய் உள்ளம் தகிக்கின்றது
விட்டுச்செல்லும் உறவுகள்
தீர்ந்து போன சோகங்கள்
அடுத்த ஜென்மத்திலாவது 
எதுவும் அறியாமல் எதற்கும் ஆசைபடாமல்
சொந்தங்களின் பந்தச்சிறையில்
அகபட்டுக்கொள்ளாமல் இருக்க 
எதையும் தாங்கும் இதயமொன்று கொடுத்தருள் இறைவா
என்பதே சாம்பலாய் மாறும்வரை 
இருக்கும் மிச்சநேர பிரார்த்தனை
என்னதான் இருக்கட்டுமே
மண்குடத்திலிருந்து நீரில் விழுந்து 
கலந்து சங்கமிக்கும் போதுதான் அமைதி 
இல்லையென்றால் அடங்காத அந்த பாசம் 
இந்த சாம்பலை உயிர்த்தெழ செய்தாலும் செய்திடும்  

 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

உங்கள் கருத்துக்கள் வரவேற்கப்படுகிறது