புதன், மார்ச் 12, 2014

கேள்விக்கென்ன பதில்?

உங்களிடம் ஒரு குழப்பமான கேள்வி கேட்கட்டுமா..................?

ஒரு கிராமத்தில் மூன்று நண்பர்கள் இருந்தனர். உங்கள் குழப்பத்தை குறைத்திட உதவியா அவங்க பெயர் ராமு, சோமு, பாலு என்று வைத்துக்கொள்வோம். இவர்களில் ராமு பிறவியிலேயே பார்வையற்றவன்.சோமுவுக்கு சுத்தமா காது கேட்காது. மூன்றாமவன் பாலு பிறவி ஊமை.
 
மூணு பேரும்  சேர்ந்து வியாபாரம் பண்ணி நல்லா சம்பாதிச்சு ஒரே வீட்டில் தங்கி வாழ்ந்து வந்தார்கள். ஒருநாள் குருடன் ராமு சேர்த்து வச்சிருந்த பணத்தையெல்லாம் அவனுக்கு தெரியாம (??) திருடிக்கொண்டு செவிடன் சோமு எஸ்கேப் ஆகுறான்.  
ஏதேச்சையா அந்தப்பக்கம் வந்த பாலு (ஊமை) இதை பார்த்துட்டான். சைகை காட்டி கூப்பிட்டு உதவி கேட்க பக்கத்தில வேற யாருமே இல்லாத காரணத்தால் அவனால் எதுவும் செய்ய முடியவில்லை. அவன் எப்படி தன் நண்பன் ராமுவுக்கு பணப்பை திருடு போன விஷயத்தை சொல்லுவான்? இதுதான் அந்த கேள்வி.
 
இதே கதை கொஞ்சம் பெரிய, சிறிய வித்தியாசங்களுடன் பலர் சொல்ல கேட்டிருப்பீர்கள். ஆனால் கேள்வி  மட்டும் பொதுவானது. பிறவியிலேயே வாய்பேச முடியாத ஒருவர் எப்படி ஒரு குருடனிடம் ஒரு விஷயத்தை சொல்லி புரியவைப்பான்?
 
மிகச்சரியான விடைதான் வேண்டும் என்று கேட்கவில்லை. கண்டிப்பாக பல விடைகள் கிடைக்கலாம். ஆனால் யாருடைய உதவியும் இல்லாமல் வேறு கருவிகளை உபயோகிக்காமல் ஊமையான பாலு தன் நண்பனுக்கு உதவ முடியுமா? என்பதுதான் என் கேள்வி!
 
இந்த கேள்விக்கு என்னவெல்லாம் பதிலாக வரும் என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்
 
 
 

3 கருத்துகள்:

  1. தயவுசெய்து இதற்கான விடையை கூறிவிடுங்கள்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. குருடன் செவிடன் ஊமை அவர்களின் பெயர்களாக இருக்கலாம்.

      நீக்கு

உங்கள் கருத்துக்கள் வரவேற்கப்படுகிறது