வியாழன், நவம்பர் 20, 2014

வதந்"தீ"

ஒன்றுகூடி நின்றவர்களிடையே வதந்தி பரவியது.
வதந்தி பரவிதும் வாக்குவாதம் தொடங்கியது
வாக்குவாதம் முற்றி க(ழ)லகம் தொடங்கியது.
க(ழ)லகம் தொடங்கியதும் பிரிவினை தோன்றியது.
பிரிவினை தோன்றியதும் அணிகள் தோன்றியது
அணிகள் தோன்றியதும் கோஷங்கள் தோன்றியது
கோஷங்கள் தோன்றியதும் கூட்டணி தோன்றியது
கூட்டணி தோன்றியதும் அடிதடிகள் ஆனது
அடிதடிகள் ஆனதும் காயம் பட்டுகொண்டனர்.
காயம்பட்டுக் கொண்டவர் நிர்கதியாய் நின்றனர்.
நிற்கதியாய் நின்றவர்கள் வஞ்சிக்கப் பட்டனர்.
வஞ்சிக்கப் பட்டவர்கள் நீதிவேண்டி சென்றனர்.
நீதிவேண்டி சென்றவர்கள் ஒன்றுகூடி நின்றனர்.
 

6 கருத்துகள்:

  1. "தீ "பரவும் விதம் குறித்தும்
    வேகம் குறித்தும் சொல்லிப் போனவிதம் அற்புதம்
    குறிப்பாக முடித்த விதமும்...
    பகிர்வுக்கும் தொடரவும் நல்வாழ்த்துக்கள்

    பதிலளிநீக்கு
  2. மீண்டும் முதலில் இருந்து ஆரம்பம்தான் போல்! சிறப்பான படைப்பு! நன்றி!

    பதிலளிநீக்கு
  3. வதந்தியின் வீச்சை கட்டுப்படுத்தமுடியாது என்பதை உணர்த்தும் பதிவு.

    பதிலளிநீக்கு
  4. வதந்தீ க்கு முடிவே கிடையாதுதான்....எத்த்னை எத்தனை அறிவியல் வளர்ச்சி அடைந்தாலும்....

    பதிலளிநீக்கு

உங்கள் கருத்துக்கள் வரவேற்கப்படுகிறது