திங்கள், மே 23, 2016

செருப்பு

"ஒரு நல்ல செருப்பு குடுங்க சார்" என்று கேட்டபடியே முகத்தில் கவலை கொப்பளிக்க கடைக்குள் வந்த அவன் கால் பாதத்தை பார்வையால்
ஒருமுறை ஸ்கானிங் செய்து, கால் அளவை தோரயமாக கணித்து
கொண்டு ஏழாம் நம்பர் செருப்பு ஒன்றை எடுத்துக் கொண்டு வந்து
கொடுத்தேன். அவன் செருப்பை பார்த்துவிட்டு கையில் வாங்கி
போட்டுப் பார்க்காமலேயே "இல்லை சார்..இது பெரிசு. இதை விட 
சின்ன சைஸு குடுங்க" என்றான்.

கடுப்புடன் மீண்டும் உள்ளே சென்று ஆறாம் நம்பர் செருப்பை கொண்டு
வந்து கொடுத்தேன். வாங்க வந்தவன் அதையும் போட்டுப் பார்க்காமல்,
"ம்ஹும்..இதுவும் பெரிசு சார். இன்னும் கொஞ்சம் சின்னது வேணும்".

திரும்பவும் உள்ளே சென்று ஐந்தாம் நம்பர் செருப்பை எடுத்து வந்தேன்.
கையில் வாங்கி அதை அப்படியும் இப்படியும் திருப்பி திருப்பி
பார்த்து விட்டு "இதவிட ஒரு நம்பர் சின்னது குடுங்க சார்" என்றான்

இன்னாடா இது...இப்படி கலாயிக்றானே..? செருப்பு இவனுக்கா..இல்ல
இவனோட மகனுக்கா..? என்று யோசித்தபடியே மீண்டும் உள்ளே சென்று
நாலாம் நம்பர் செருப்பை கொண்டுவந்து கொடுத்தேன்.

சந்தோஷமாக செருப்பை கையில் வாங்கியவன் விலையை கேட்டு 
காசைக் கொடுத்து விட்டு செருப்பை தன காலில் மாட்டத் தொடங்கினான்.
நான் அதிர்ச்சியில் இருந்து மீள்வதற்குள் தனது ஏழுஅங்குல அளவு பாதத்தை
அந்த நான்கு அங்குல அளவு செருப்பினுள் எப்படியோ கஷ்டப்பட்டு
நுழைத்துவிட்டான். கால் பாதங்கள் பிதுங்க தோல் பிய்ந்து ரணமாகிவிட
தயார் நிலையில் இருந்ததை கண்டநான் அவனிடம் கேட்டேன்.
"இவ்வளவு சின்ன சைஸு செருப்ப ஏன் இப்படி கஷ்டப்பட்டு போடுறீங்க.?
நான் வேற யாருக்கோ வாங்கறீங்கன்னு நெனச்சேன்

இவ்ளோ சின்ன சைஸு  செருப்ப ஏன்  போடுறீங்கன்னா கேட்டீங்க..
அது வந்து சார், வீட்டுல அப்பாவுக்கு பைத்தியம். அம்மா பக்கவாதம் வந்து 
கால் கை விளங்காம படுத்திருக்காங்க. தம்பி ஒரு அடிதடி கேஸில 
மாட்டிகிட்டு இப்ப ஜெயில்ல இருக்கான்.கட்டிகுடுத்த தங்கச்சி வாழா 
வெட்டியா வீட்டுக்கு திரும்பி வந்துட்டா..செஞ்சினிருந்த வேலை போயி 
இப்ப ஆறுமாசமா வேற வேலை எதுவும் கெடைக்கல. பசங்களுக்கு பீஸ் 
கட்டமுடியாம ஸ்கூல்ல TC குடுத்து அனுப்பிட்டாங்க. அவுங்களுக்கு 
சரியா சாப்பாடு போடக்கூட முடியல. இதுக்கு நடுவில என் பொண்டாட்டி 
வேற ஒருத்தன லைன் விட்டுனு இருக்கா..இந்த நிலைமையில இப்படி 
வலிக்கற மாதிரி ஒரு செருப்ப போட்டுக்கினு வீட்டுக்கு போகணும் சார்.

வீட்டு வாசல்ல இந்த செருப்ப கழட்டி வைக்கும் போது வர்ற
ஒரு சுகம் இருக்கே...அது அனுபவிச்சாதான் தெரியும் சார்...!!!   

2 கருத்துகள்:

  1. இத்தனை கஷ்டங்களையும் ஒருவன் அனுபவிக்கிறான் என்றால்... அவனை தன்னம்பிக்கையானவன் என்று சொல்லலாம் போல!

    பதிலளிநீக்கு
  2. வாங்க மாது .. இம்புட்டு நாலா எங்க ஆளே காணோம். என்னமோ இப்பவாது வந்தீங்களே.

    பதிலளிநீக்கு

உங்கள் கருத்துக்கள் வரவேற்கப்படுகிறது